ஐரோப்பிய ஒன்றியத்திடம் வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்!

Colombo Kilinochchi European union Saman Rathnapriya
By Rakesh Oct 02, 2021 12:33 AM GMT
Report

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்க முன் நாட்டின் மனித உரிமையைச் சுட்டெண்ணை ஆராய வேண்டும் என்று வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அத்தகைய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

"ஐரோப்பிய ஒன்றியத்தால் ஒரு நாட்டுக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கு முன் அதில் குறிப்பிடப்பட்டுள்ள 27 நிபந்தனைகளுக்கு அந்த நாட்டு அரசு இணக்கம் தெரிவிக்க வேண்டும்.

இலங்கை அரசானது போர் நடைபெற்று 10 வருடங்கள் கடந்த நிலையில் காணாமல் ஆக்கப்படுதல், அரசியல் கைதிகள் விவகாரம், காணி அபகரிப்பு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலமான கைது நடவடிக்கைகள் என்பன தொடர்ந்த வண்ணமே உள்ளது.

இன்னொருபுறம் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஐ.நாவில் காணாமல்போனவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்குவதாக தெரிவித்துள்ளார். மரணச் சான்றிதழ் வழங்குவதற்கு எமது உறவுகள் காணாமல்போனவர்கள் அல்லர்; காணாமல் ஆக்கப்பட்டவர்கள்.

இதனை சர்வதேசம் நன்கு உணர வேண்டும். மரணச் சான்றிதழ் வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்த நிலையில் நமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அவர் முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் விவசாய பூமி பெரும்பான்மை இனத்தவர்களால் அபகரிப்பு செய்யப்படுகின்ற நிலையில் தமிழ் மக்கள் உண்ண வழியின்றி தமது நிலங்களை இழந்த நிலையில் காணப்படுகின்றனர்.

1984ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழ் மக்கள் தொடர்ந்தும் அகதி வாழ்க்கை நடாத்திவரும் நிலையில் அரசாங்கமானது தீர்க்கமான முடிவொன்றை மக்களுக்கு வழங்க வேண்டும். மன்னார் மாவட்டத்தில் மீனவ மக்களின் வாழ்விடங்கள் மற்றும் அவர்களின் தொழில் துறைகளை கடற்படையினர் இன்னும் விடுவிக்காமல் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

தமிழ் மக்களின் மீன்வளத்தை தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் அனுபவித்து வரும் நிலையில் இதனை நம்பி கடற் தொழிலில் ஈடுபட்டவர்கள் மாற்றுத் தொழிலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பொது மக்களின் 3500 ஏக்கர் காணிகளில் சுமார் 500 ஏக்கர் காணிகள் தொடர்ந்தும் பாதுகாப்பு தரப்பினரின் பயன்பாட்டில் உள்ளன.

மேலும், வடக்கில் சிறந்த விளைச்சலைத் தரக்கூடிய 2 ஆயிரம் ஏக்கர் வளமான விவசாய காணிகள் தொடர்ந்தும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் விடுவிக்கப்படாமல் உள்ளன.

இவ்வாறான நிலையில் இலங்கை அரசுக்கு ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் வழங்குவதற்கு முன்னர் குறித்த விடயங்கள் தொடர்பில் கவனத்தில்கொள்ள வேண்டும்" என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஊடக சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரதிநிதிகள், வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம் புனரமைப்பு சங்கத் தலைவர், கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் செயலாளர், மாதர் சங்க உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், சட்டத்தரணி எனப் பலரும் கலந்துகொண்டனர்.  

6ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Stouffville, Canada

05 Dec, 2025
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா, பூந்தோட்டம்

07 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
நன்றி நவிலல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Gevelsberg, Germany

04 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, Markham, Canada

06 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, Mississauga, Canada

09 Dec, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US