ஐரோப்பிய ஒன்றியத்திடம் வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்!

Colombo Kilinochchi European union Saman Rathnapriya
By Rakesh Oct 02, 2021 12:33 AM GMT
Report

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்க முன் நாட்டின் மனித உரிமையைச் சுட்டெண்ணை ஆராய வேண்டும் என்று வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அத்தகைய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

"ஐரோப்பிய ஒன்றியத்தால் ஒரு நாட்டுக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கு முன் அதில் குறிப்பிடப்பட்டுள்ள 27 நிபந்தனைகளுக்கு அந்த நாட்டு அரசு இணக்கம் தெரிவிக்க வேண்டும்.

இலங்கை அரசானது போர் நடைபெற்று 10 வருடங்கள் கடந்த நிலையில் காணாமல் ஆக்கப்படுதல், அரசியல் கைதிகள் விவகாரம், காணி அபகரிப்பு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலமான கைது நடவடிக்கைகள் என்பன தொடர்ந்த வண்ணமே உள்ளது.

இன்னொருபுறம் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஐ.நாவில் காணாமல்போனவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்குவதாக தெரிவித்துள்ளார். மரணச் சான்றிதழ் வழங்குவதற்கு எமது உறவுகள் காணாமல்போனவர்கள் அல்லர்; காணாமல் ஆக்கப்பட்டவர்கள்.

இதனை சர்வதேசம் நன்கு உணர வேண்டும். மரணச் சான்றிதழ் வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்த நிலையில் நமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அவர் முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் விவசாய பூமி பெரும்பான்மை இனத்தவர்களால் அபகரிப்பு செய்யப்படுகின்ற நிலையில் தமிழ் மக்கள் உண்ண வழியின்றி தமது நிலங்களை இழந்த நிலையில் காணப்படுகின்றனர்.

1984ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழ் மக்கள் தொடர்ந்தும் அகதி வாழ்க்கை நடாத்திவரும் நிலையில் அரசாங்கமானது தீர்க்கமான முடிவொன்றை மக்களுக்கு வழங்க வேண்டும். மன்னார் மாவட்டத்தில் மீனவ மக்களின் வாழ்விடங்கள் மற்றும் அவர்களின் தொழில் துறைகளை கடற்படையினர் இன்னும் விடுவிக்காமல் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

தமிழ் மக்களின் மீன்வளத்தை தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் அனுபவித்து வரும் நிலையில் இதனை நம்பி கடற் தொழிலில் ஈடுபட்டவர்கள் மாற்றுத் தொழிலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பொது மக்களின் 3500 ஏக்கர் காணிகளில் சுமார் 500 ஏக்கர் காணிகள் தொடர்ந்தும் பாதுகாப்பு தரப்பினரின் பயன்பாட்டில் உள்ளன.

மேலும், வடக்கில் சிறந்த விளைச்சலைத் தரக்கூடிய 2 ஆயிரம் ஏக்கர் வளமான விவசாய காணிகள் தொடர்ந்தும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் விடுவிக்கப்படாமல் உள்ளன.

இவ்வாறான நிலையில் இலங்கை அரசுக்கு ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் வழங்குவதற்கு முன்னர் குறித்த விடயங்கள் தொடர்பில் கவனத்தில்கொள்ள வேண்டும்" என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஊடக சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரதிநிதிகள், வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம் புனரமைப்பு சங்கத் தலைவர், கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் செயலாளர், மாதர் சங்க உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், சட்டத்தரணி எனப் பலரும் கலந்துகொண்டனர்.  

மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US