தேங்காய் நெருக்கடிக்கு தீர்வு : அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
நாட்டில் நிலவும் தேங்காய் நெருக்கடிக்கு தீர்வாக அடுத்த 2 வாரங்களுக்குள் 10 இலட்சம் தேங்காய்களை புறநகர் பகுதிகளுக்கு விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க( Wasantha Samarasinghe)தெரிவித்துள்ளார்.
இதன்படி, சதொச ஊடாக தேங்காய் ஒன்றை 130 ரூபாவிற்கு வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தேங்காய் விலை
மேலும், அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டங்களில் உள்ள தென்னை உற்பத்திகளால் கிடைக்கும் தேங்காய்களே இவ்வாறு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாளாந்தம் 200,000 கிலோகிராம் அரிசியை சதொச ஊடாக சந்தைக்கு இன்று முதல் கட்டுப்பாட்டு விலையில் வழங்க அரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம் வௌியிட்டதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும், தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

Optical illusion: உங்கள் கண்களுக்கு உயிர் உள்ளது எனில் இதில் இருக்கும் நேரான “28” எங்கே உள்ளது? Manithan

சமீபத்தில் திருமணம் செய்த தொகுப்பாளினி பிரியங்காவிற்கு இப்படியொரு சோகமா?... அவரே வெளியிட்ட போட்டோ Cineulagam

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் நகர்வு... வங்கதேசத்தில் ஆயுதங்களை தயாரிக்க துருக்கி முடிவு News Lankasri
