மைத்திரி தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்திய அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகள்! பேசப்பட்டது என்ன?
அமைச்சர்கள் சிலர் உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலர் விசேட பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருடன் கலந்துரையாடச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பேச்சுவார்த்தையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena), அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார(Maithripala Sirisena), உதய கம்மன்பில (Udaya Gammanpila), பேராசிரியர் திஸ்ஸ விதாரண (Tissa Vitharana), ராஜாங்க அமைச்சர்கள் தயாசிறி ஜயசேகர(Dayasiri Jayasekara), துமிந்த திஸாநாயக்க(Duminda Dissanayake), லசந்த அழகியவண்ண(Lasantha Azhagiyavanna), ஜயந்த சமரவீர(Jayantha Samaraweera), நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிரான் அலஸ் (Tron Alas), அத்துரலியே ரத்ன தேரர் (Athuraliye Ratna Thera) மற்றும் விசேட மருத்துவ நிபுணர் ஜீ. வீரசிங்க (G. Weerasinghe) ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க எடுத்துள்ள தீர்மானம் சம்பந்தமாக ஆளும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மின்சாரம், பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் துறைமுகம் ஆகியவற்றை சேர்ந்த தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் உள்ளிட்ட மின்சார சபை, பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், துறைமுக அதிகார சபை ஆகியவற்றின் சில தொழிற்சங்கங்கள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டனர்.
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க எடுத்துள்ள தீர்மானத்தை நிறுத்த வேண்டும் என தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.
இதற்காக தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு செல்லவும் தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
தொழிற்சங்க பிரதிநிதிகள் முன்வைத்த விடயங்கள் சம்பந்தமாக ஆாய்ந்து, 11 கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் மீண்டும் தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்திப்பதாக கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையிலான இந்த பேச்சுவார்த்தை இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது.