ரஞ்சனுக்காக ஒன்றிணைந்த திரை கலைஞர்கள்: ஜனாதிபதிக்கு நெருக்கமானவரும் பங்கேற்பு
நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை (Ranjan Ramanayake) விடுதலை செய்துக்கொள்வது தொடர்பாக சிங்கள திரைப்பட கலைஞர்கள் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க (Geetha Kumarasinghe) கலந்துக்கொண்டுள்ளதுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நெருக்கமான பிரபல வர்த்தகர் நிஷ்சங்க சேனாதிபதியும் (Nishanka Senathipathi) கலந்துக்கொண்டுள்ளார்.
இவர்களை தவிர நடிகர் கமல் அத்தர ஆராச்சி, நடிகை தில்ஹானி ஏக்கநாயக்க உட்பட சுமார் 30 திரை கலைஞர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டுள்ளனர். இதன் போது, ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக கடிதம் ஒன்றும் நிஷ்சங்க சேனாதிபதியிடம் கையளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் சிரேஷ்ட கலைஞர்களான மாலினி பொன்சேகா, ரவிந்திர ரந்தெனிய, சனத் குணதிலக்க போன்றவர்கள் கலந்துக்கொள்ளவில்லை.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிங்கள திரைப்படத்துறையில் சூப்பர் ஸ்டார் என்பதுடன் அவர் படங்களில் நடிக்காத காரணத்தினால் சிங்கள திரைப்படத்துறை வர்த்தக ரீதியில் வீழ்ச்சியான நிலைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.