தமிழகத்தில் தொடரும் அதிரடி மாற்றங்கள்..! முதலமைச்சர் விஜயின் புதிய உத்தரவு - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமைச் செயலகம் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து அரசு மற்றும் ஒப்பந்த ஊழியர்களும் காலை 10 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்து, உடனடியாக பணியைத் தொடங்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நிர்வாக அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதிகாரிகள் இடமாற்றம் முதல் துறைகள் செயல்படும் விதம் வரை பல புதிய நடைமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது தலைமைச் செயலக ஊழியர்களுக்கான முக்கிய உத்தரவு ஒன்று வெளியாகியுள்ளது.
புதிய உத்தரவு
சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமைச் செயலகம் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து அரசு மற்றும் ஒப்பந்த ஊழியர்களும் காலை 10 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்து, உடனடியாக பணியைத் தொடங்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைமைச் செயலகத்தில் 40ற்கும் மேற்பட்ட துறைகளில் சுமார் 5,500ற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கான அலுவலக நேரம் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில ஊழியர்கள் தாமதமாக வருவதால் நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படுவதாக நீண்டகாலமாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
இதையடுத்து, அனைத்து ஊழியர்களும் காலை 10 மணிக்கு முன்பாகவே அலுவலகத்திற்கு வந்து, வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு சரியான நேரத்தில் பணியைத் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய் பெரும்பாலும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் தலைமைச் செயலகத்திற்கு வந்து பணியைத் தொடங்குவதால், அதே ஒழுக்கத்தை ஊழியர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து பேருந்து, தொடருந்து மற்றும் தனியார் வாகனங்களில் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் முன்கூட்டியே பயண திட்டமிடல் செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதன் மூலம் அரசுப் பணிகள் தாமதமின்றி சீராக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஊழியர்களின் வருகை நேரத்தை கண்காணிக்க பயோமெட்ரிக் முறையை அறிமுகப்படுத்த முயற்சி செய்யப்பட்டிருந்தது.
ஆனால் ஊழியர் சங்கங்களின் எதிர்ப்பால் அந்த திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. தற்போது பழைய வருகைப் பதிவேட்டு முறையே தொடர்கிறது.
மேலும், இனி தலைமைச் செயலாளர் மற்றும் துறைச் செயலாளர்கள் ஊழியர்களின் வருகை நேரத்தை நேரடியாக கண்காணிக்கவுள்ளதாகவும், தொடர்ந்து தாமதமாக வரும் ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam