யாழ். மற்றும் கிளிநொச்சி மக்களுக்கு சுத்தமான குடிநீர் - இரு திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் பிரதமர்
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி (பளை) பகுதியில் 24000m3 மூலம் 3 லட்சம் மக்களுக்கு (60,000 குடும்பங்களுக்கு) பாதுகாப்பான குடிநீரை வழங்கும் இரண்டு முக்கிய நீர் விநியோக திட்டங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
ஆரம்பிக்கப்படும் திட்டங்கள், SWRO உப்புநீக்கும் ஆலைபிரிவு, இது தாழையடியில் கட்டப்படும் மற்றும் இது நயினாதீவில் முழுமையாக நிறைவு செய்யப்பட்ட நீர் வழங்கல் திட்டமாகும்.
இந்த திட்டமானது 5000 பயனாளிகளுக்கு பாதுகாப்பான நீரை வழங்கும் திட்டமாகும் மேலும் யாழ்ப்பாண நகர நீர் விநியோகத் திட்டமும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் இதில் ஒரு லட்சம் மக்கள் தொகையை உள்ளடக்கிய JKWSSP ( Jaffna Kilinochchi Water Supply and Sanitation Project) இன் கீழ் 284 கி.மீற்றர் நீளமுள்ள குழாய்களை அமைப்பும் பணிகளும் அடங்கும்.
Prime Minister @PresRajapaksa will on Oct. 6 VIRTUALLY inaugurate two vital Water Projects in #Jaffna which will provide safe drinking water to 300,000 people (60,000 families) in Jaffna & Killinochchi (Palai) through 24000m3 per day. #SriLanka #lka #VisionInAction pic.twitter.com/Tolk2D4WDT
— G. Cassilingham (@CassilingamG) September 27, 2021
யாழ்ப்பாண நகர நீர் விநியோகம் மற்றும் தாழையடி SWRO 2023 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு 3 லட்சம் பயனாளிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது என பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீத்தநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.