கொழும்பில் பதற்றம்! முன்னாள் அமைச்சர் விமல் மற்றும் பொலிஸாருக்கு இடையில் கடும் மோதல்..
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் பொலிஸாருக்கு இடையில் மோதல் நிலை வெடித்துள்ளது.
பத்தரமுல்லையில் உள்ள போர் வீரர்கள் நினைவுத் தூபிக்கருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினருக்கும், பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் நிலை காரணமாக, அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது.
அனுமதி மறுப்பு
போர் வீரர்களை நினைவுகூரும் பொருட்டு மலர்க் கொத்துகளுடன், சென்ற விமல் வீரவன்ச மற்றும் அவருடைய குழுவினருக்கு நினைவிடத்திற்குள் செல்ல பொலிஸார் அனுமதி மறுத்துள்ளனர்.
இதனால் கடும் கோபமடைந்த விமல் வீரவன்ச தரப்பு பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன், சம கால அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தது.
இதனையடுத்து பொலிஸாரின் தடையையும் மீறி உள்ள செல்ல முயன்ற விமல் வீரவன்ச தரப்பினை தடுத்து நிறுத்துவதற்கு பொலிஸார் கடும் பிரயத்தனப்பட்டனர்.
இதன் காரணமாக, இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது.
எவ்வாறாயினும், நினைவுத் தூபிக்கு உள்ளே செல்ல பொலிஸார் அனுமதிக்காததால், நினைவுத் தூபியின் வாயிலில் மலர்க் கொத்துக்களை வைத்து தங்களுடைய அஞ்சலியை விமல் வீரவன்ச தரப்பு செலுத்தினர்.
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri