தனது ஒரு பாதத்தை இழந்த நிலையில் மகனின் பார்வைக்காக கையேந்தும் முன்னாள் போராளி (Video)
இலங்கையில் இடம்பெற்ற 30 ஆண்டு போர் தமிழர் வாழ்வியலில் பல விதமான
மாற்றங்களுக்கு காரணமாக அமைந்தது.
இந்த கொடூர யுத்தத்தினால் தமிழர் தாயக பகுதிகளில் பலர் மரணித்தனர், பலர் காணாமல் ஆக்கப்பட்டனர், இன்னும் பலர் தொடர்பில் எந்த தகவலும் தெரியாத நிலை காணப்படுகிறது.
ஆனாலும் யுத்தத்தின் வடுக்களினாலும் நேரடியாக யுத்ததினாலும் பாதிக்கப்பட்ட பலர் இன்றும் மாற்றுத்திறனாளிகளாக எம் சமூகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக தனது 14 வயதில் ஆயுதம் ஏந்தி போராடி தற்போது மாற்றுத்திறனாளியாகியுள்ள சிலுவைராசா என அழைக்கப்படும் தமிழ் கீதனின் தற்போதைய நிலை மிகவும் வேதனைக்குரியதாக காணப்படுகின்றது.
தனது ஒரு பாதத்தை இழந்த நிலையில் மகனின் பார்வைக்காக கையேந்தும் முன்னாள் போராளியின் கதை இது...





பிரச்சனையில் இருக்கும் முத்துவை நேரம் பார்த்து பழி வாங்கிய அருண்.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri
