கல்முனை ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம்! தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடு
கல்முனை ஆதார வைத்தியசாலையின் முஸ்லிம் பெண்களினுடைய ஆடை விவகாரத்தில் சுற்றுநிருபத்தை பின்பற்றுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
ஆடை விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.
அத்தோடு, ஆடை விவகாரம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வைத்தியசாலை ஊழியர்கள், ஏனைய பணியாளர்களையும் இலக்கு வைத்து பதிவுகள் வெளியாகி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த விவகாரத்திலே தமிழரசுக்கட்சி பாராமுகமாக இருந்து விட்டார்களோ என்கின்ற கேள்வி எழுப்பப்பட்டபோது இதற்கு பதிலளிக்கும் முகமாக சிறிநேசன் அரச சுற்றுநிருபம் பின்பற்றப்பட்டு இருக்கின்றது. நாம் மக்களை குழப்ப கூடாது என்ற நோக்கத்துடன் கண்ணியமாக இருக்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.