இலங்கைக்கு வரவுள்ள சீன ஆராய்ச்சி கப்பல்
சீன கடல் ஆராய்ச்சிக் கப்பல் “ஷி யான் 6” கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலானது இன்று (25.10.2023) வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதி செய்துள்ளார்.
இந்தியா அதிருப்தி
சீன கடல் ஆய்வுக் கப்பல் இலங்கை வருகை குறித்து இந்தியா அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சும், வெளிவிவகார அமைச்சும் கப்பலின் வருகைக்கு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தன.

“ஷி யான் 6” என்பது புவி இயற்பியல் ஆய்வுக்காக நில அதிர்வுத் தகவல்களைச் சேகரித்து பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்ட ஒரு நவீன அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலென தெரிவிக்கப்படுகிறது.
நாரா நிறுவனத்துடன் இணைந்து இந்த கப்பல் ஆய்வு நடத்த உள்ளதோடு சுமார் 25 நாட்கள் ஆராய்ச்சியில் ஈடுபடும் எனவும் கூறப்படுகிறது.
ஓய்வெடுக்க தாய்லாந்து சென்றுள்ள நடிகை சமந்தா... தங்கும் அறையின் ஒரு நாள் வாடகை எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan