கோட்டாபய ராஜபக்ச - மகிந்த ராஜபக்சவிற்கு புது வருட வாழ்த்து அட்டை அனுப்பியுள்ள சீன ஜனாதிபதி!
சீன ஜனாதிபதி சி ஜின்பிங், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை அனுப்பியுள்ளார்.
கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
டிசம்பர் 25 ஆம் திகதி ஜனாதிபதி சி ஜின்பிங் கையெழுத்திட்டு புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், சீனப் பிரதமர் லி கெக்கியாங் 2021 ஆம் ஆண்டிற்கான தனது வாழ்த்துகளை இலங்கை பிரதிநிதிக்கு அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளது.
சீன அரசு இலங்கை சபாநாயகர் மற்றும் வெளியுறவு அமைச்சருக்கும் வாழ்த்துக்களை அனுப்பியிருந்தது.
தேசிய மக்கள் காங்கிரஸ் (NPC) நிலைக்குழுவின் தலைவர் லி ஜான்ஷு சபாநாயகர் மஹிந்தா யாபா அபேவர்தனவுக்கு வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார்.
இதற்கிடையில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam