அநுரவுடன் இணைந்து செயற்பட தயாராகும் சீனா
இலங்கையின் நிலையான பொருளாதாரத்தில் ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்க தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
அத்துடன், நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடாத கொள்கைகளை கடைப்பிடித்து, அதன் இறையாண்மைக்கு மதிப்பளித்து, ஆக்கப்பூர்வமான பங்கை ஆற்ற தயாராக உள்ளதாகவும் சீனா குறிப்பிட்டுள்ளது.
புதிய நிர்வாகம்
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் (Lin Jian ) இந்த கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

செப்டெம்பர் 21ஆம் திகதி தேர்தல் சுமுகமாக நடைபெற்றதாகவும், ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், கடனைத் திருப்பிச் செலுத்துவதில் இலங்கையின் உறுதிப்பாட்டில் சீனாவின் நம்பிக்கை பற்றிக் கேட்ட போது, சீனாவும் இலங்கையும் நீண்டகால நட்புறவைப் பகிர்ந்துகொள்வதாக லின் வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம், ஜனாதிபதி திஸாநாயக்க மற்றும் அவரது புதிய நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற தாங்கள் தயாராக உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 15 மணி நேரம் முன்
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam