சீனத் தூதுவர் நாவற்குழி விகாரைக்கு விஜயம்
புதிய இணைப்பு
சீனாவில் உள்ள பௌத்த மக்களின் உதவியுடன் இலங்கையின் ஏழை மக்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு யாழில் இடம்பெற்றது.
யாழ். தென்மராட்சி - நாவற்குழி ஸ்ரீ சமித்தி சுமன விகாரையில் இன்று(06.11.2023) இடம்பெற்றிருந்த நிகழ்வில் சீனத் தூதுவர் கீ செங்ஹோங் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.
நாவற்குழி ஸ்ரீ சமித்தி சுமன விகாரையின் தலைவர் ரத்னஸ்ரீ தேரர் தலைமையில் இடம்பெற்ற உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வில் சீனத் தூதுவர் கீ செங்ஹோங் கலந்து கொண்டு நாவற்குழியில் உள்ள தேவைப்பாடுடைய சிங்கள மற்றும் தமிழ் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்திருந்தார்.
மேற்படி உதவித் திட்டம் சீனாவின் பௌத்த சங்கம், இலங்கை மற்றும் சீன பௌத்த நட்புறவுச் சங்கம் ஊடாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளைய தினம் சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர்
நயினாதீவு உள்ளிட்ட தீவகப் பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள்: கஜிந்தன்
யாழ்ப்பாணம் ஆயர் இல்லம்
சீனாவில் உள்ள பௌத்த மக்களால் இலங்கையிலுள்ள வறிய மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
இதில் தெரிவுசெய்யப்பட்ட 300 குடும்பங்களுக்கு இந்த உலர் உணவுபொதிகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான சீன தூதுவர் ஷீ சென் ஷெங்
தலைமையாலான குழுவினர் மற்றும் யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜெ.
ஜெபரட்ணம், ஆயர் இல்ல நிதி முகாமையாளர் அருட்பணி நேசன், ஆயரின் செயலாளர்
அருப்பணி றெக்சன் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டிருந்தனர்.
முதலாம் இணைப்பு
சீன தொழிற்துறையினர் முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர் என
தெரிவித்த இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங், வடக்கு மக்களும் அதனை வரவேற்க
தயாராகவுள்ளனர் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சீன தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் (06.11.2023) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்து நெடுந்தீவு பிரதேச மக்களுக்காக 500 உலருணவுப் பொதிகளை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கையளித்தனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் இதனை தெரிவித்துள்ளார்.
உணவு பொதி
மேலும் தெரிவிக்கையில், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நான் வடக்கு மாகாணத்திற்கு வந்துள்ளேன். சீன பௌத்த மக்களால் 5000 உணவு பொதிகளை வடக்கு மாகாண மக்களுக்கு வழங்க வந்துள்ளேன்.
கடந்த முறை வடக்கில் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழங்கினோம்.
உணவுப் பொதி நெருக்கடி நிலையில் உதவியாக இருக்கும். உணவு பொதி 7000 ரூபாய் பெறுமதியானது. உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள உறவின் அடிப்படையில் உதவிகளை வழங்குவோம்.
கொரோனா நேரத்தில் நீங்களும் சினோபாம் தடுப்பூசியை பெற்றிருப்பீர்கள். பொருளாதார நெருக்கடியின் போது இலங்கையுடன் பொருளாதாரதாதை உயர்த்த முதலாவதாக சீனாவே கை கொடுத்தது. சீன எதிர்காலத்திலும் கை கைகொடுக்கும். 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான உதவிகளை சீனா வழங்கவுள்ளது.
கடலுணவு இறக்குமதி
5 மில்லியன் உணவு பொருட்களாகவும் 5 மில்லியன் கடற்றொழிலாளர்களுக்காக 5 மில்லியன் வீட்டு திட்டத்திற்கும் வழங்கவுள்ளது. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீனா சென்றபோது இலங்கை கடலுணவை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.
சீனாவில் இருந்து இலங்கைக்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது. விசேடமாக வடக்கு மாகாணத்திற்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது.
சீனா உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடு. மிகப்பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது. உங்களை அதற்கே வரவேற்கிறோம்.
சீன தொழிற்துறையினர் முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர். வடக்கு மக்களும் அதனை வரவேற்க தயாராகவுள்ளனர் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
யாழ்.வடமராட்சி சக்கோட்டை
இலங்கைக்கான சீன தூதுவர் யாழ்.வடமராட்சி சக்கோட்டை முனைக்கும் இன்று சென்றுள்ளார்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி ஊடக வருகைதந்த தூதுவர் சக்கோட்டை முனைக்கு இரண்டாவது தடவையாக வருகைதந்து பார்வையிட்டு சென்றுள்ளார்.
வடக்குக்கான 150 மில்லியன் உதவி திட்டத்தை பார்வையிடவே வருகை தந்ததாக
தெரிவிக்கப்பட்ட நிலையில் சக்கோட்டை முனைக்கு தனிப்பட்ட விடயமாக வந்து சென்றமை
குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
