நாட்டில் வாகனங்களின் விலைகள் கடுமையாக உயர்வு! விற்பனையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீதான கூடுதல் வரியை 50 சதவீதம் உயர்த்தும் முடிவைத் தொடர்ந்து, நாட்டில் வாகன விற்பனை குறைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.
மே 15 அன்று நடைமுறைக்கு வந்த இந்த வரி திருத்தத்தால், வாகனங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
புதிய விலைகளை நுகர்வோரால் வாங்க முடியாததே இந்த நிலைக்குக் காரணம் என கூறப்பட்டுள்ளது.
வாகன விலை அதிகரிப்பு
புதிய வரி திருத்தத்தின்படி, முன்பு சுமார் 70 இலட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட ஜப்பானிய ஆல்டோ காரின் விலை, 5 இலட்சம் ரூபாய் அதிகரித்து 75 இலட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஜப்பானிய வாகனங்கள் மட்டுமின்றி, இந்திய வாகனங்களின் விலைகளும் அதிகரித்து வருகின்றன. கூடுதல் வரி உயர்வால், ஒரு சிறிய வாகனத்திற்குக்கூட நுகர்வோர் கூடுதலாக 50 லட்சம் ரூபாய் வரை செலுத்த வேண்டியுள்ளது என வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதிக செலவு காரணமாக, புதிய வாகனங்களை இறக்குமதி செய்ய கடன் கடிதங்களைத் (LC) திறக்க இறக்குமதியாளர்கள் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

வாகனப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
இது எதிர்காலத்தில் சந்தையில் வாகனப் பற்றாக்குறை ஏற்படும் அபாயத்தையும் அதிகரித்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த முடிவு வாகனச் சந்தையில் கடுமையான நிலையற்ற தன்மைக்கு வழிவகுத்துள்ளது.
மேலும், நடுத்தர வர்க்க நுகர்வோருக்கு வாகனம் வாங்குவது ஒரு கனவாகிவிட்டது என்றும் இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.
You may like This..
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 12 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri