இலங்கைக்கு வழங்கிய கடன் தொடர்பில் சீனா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சீனா இலங்கைக்கு வழங்கிய கடனை மீள செலுத்துவதற்கு இரண்டு வருட காலவகாசத்தை சீனா வழங்கியுள்ளது.
சீன இறக்குமதி – ஏற்றுமதி வங்கியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு கடனை மீள செலுத்தாதிருப்பதற்கான சந்தர்ப்பத்தை இலங்கை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை பெற்றுக்கொள்வதற்கான ஆதரவை வழங்வுள்ளதாகவும் அந்த வங்கி அறிவித்துள்ளது.
ஏழு தசாப்தங்களில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் 22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கைக்கு பிராந்திய போட்டியாளர்களான சீனாவும் இந்தியாவும் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குபவர்களாகும்.
கடிதத்தின்படி, இலங்கையின் கோரிக்கையின் அடிப்படையில் உடனடி தற்செயல் நடவடிக்கையாக 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் செலுத்த வேண்டிய கடன் சேவையை நீட்டிக்கப் போவதாக சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி தெரிவித்துள்ளது.





மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
