இலங்கைக்கு வழங்கிய கடன் தொடர்பில் சீனா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சீனா இலங்கைக்கு வழங்கிய கடனை மீள செலுத்துவதற்கு இரண்டு வருட காலவகாசத்தை சீனா வழங்கியுள்ளது.
சீன இறக்குமதி – ஏற்றுமதி வங்கியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு கடனை மீள செலுத்தாதிருப்பதற்கான சந்தர்ப்பத்தை இலங்கை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை பெற்றுக்கொள்வதற்கான ஆதரவை வழங்வுள்ளதாகவும் அந்த வங்கி அறிவித்துள்ளது.
ஏழு தசாப்தங்களில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் 22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கைக்கு பிராந்திய போட்டியாளர்களான சீனாவும் இந்தியாவும் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குபவர்களாகும்.
கடிதத்தின்படி, இலங்கையின் கோரிக்கையின் அடிப்படையில் உடனடி தற்செயல் நடவடிக்கையாக 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் செலுத்த வேண்டிய கடன் சேவையை நீட்டிக்கப் போவதாக சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி தெரிவித்துள்ளது.
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam