ஈரான் - லெபனானுக்கு மனிதாபிமான உதவி வழங்க சீனா முடிவு
அமெரிக்கா - இஸ்ரேல் தொடுத்த போரினால் ஈரான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள "மனிதாபிமான பேரழிவு" தங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இரு நாடுகளின் மீள்வடிவமைப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு உதவ பெய்ஜிங் முடிவு செய்துள்ளது.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் லின் ஜியான் தலைநகரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அந்தந்த நாடுகளின் தற்போதைய எதார்த்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஈரான் மற்றும் லெபனானுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க சீனா முடிவு செய்துள்ளது.
பொருளாதார நிலை
அங்குள்ள மக்களின் பொருளாதார நிலை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளில் அவர்களுக்கு மேலும் உதவவும் இந்த உதவி வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
கடந்த பெப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராகப் போரைத் தொடங்கியதிலிருந்து, டெஹ்ரானுக்கு சீனா உதவி வழங்குவது இது இரண்டாவது முறையாகும்.இதற்கு முன்னர் கடந்த மார்ச் மாதத்தில் சீனா ஈரானுக்கு அவசர உதவிகளை அனுப்பியிருந்தது.

பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து மேற்கொண்டு வரும் சமாதான முயற்சியின் ஒரு பகுதியாக, போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குச் சம்மதித்துள்ள நிலையில் சீனாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி வருகிற வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri