இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பச்சை மிளகாயின் விலை
கறி மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலை கிலோ ரூபா1,400 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தம்புள்ளை மற்றும் கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையங்களில் பச்சை மிளகாய் நேற்று (06) ஒரு கிலோ ரூபா 1,000 ரூபா முதல் 1,100 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
குறைந்த அளவே மிளகாய் விநியோகம்
கடந்த சில மாதங்களாக கறி மிளகாய் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததாலும், மழைக்காலத்துடன் பச்சை மிளகாய் விலையும் அதிகரித்துள்ளது.

எனினும், பொருளாதார மத்திய நிலையங்களுக்கு குறைந்த அளவே மிளகாய் விநியோகிக்கப்படுவதால் விலையேற்றம் அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கறி மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் தவிர ஏனைய காய்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளன.
சமீபத்தில், கரட் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை குறைக்கப்பட்டது, தற்போது கரட்டின் மொத்த விலை கிலோ ரூ.400 ஆக உயர்ந்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கும் என பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு