சிலியின் முன்னாள் ஜனாதிபதி ஹெலிக்கொப்டர் விபத்தில் உயிரிழப்பு
தென் அமெரிக்க நாடான சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா ஹெலிக்கொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தானது நேற்று (06.02.2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தேசிய துக்க தினம்
சிலியில் உள்ள பிரபல சுற்றுலா தலமான லகோ ரங்கொ பகுதிக்கு தனது சொந்த ஹெலிக்கொப்டரில் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா உள்ளிட்ட மொத்தம் 4 பேர் பயணித்துள்ளனர்.
இந்நிலையில் திடீரென அந்த ஹெலிக்கொப்டர் தெற்கு சிலியில் உள்ள ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.
தகவல் அறிந்த மீட்புப் படையினர் விரைந்து சென்று முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா உடலைக் கண்டுபிடித்துள்ளதுடன் பயணம் செய்த 3 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தேசிய துக்க தினம்
இந்நிலையில் செபஸ்டியன் பினேராவின் மரணத்தை சிலி உள்துறை அமைச்சர் கரோலினா தோஹா உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா மரணத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் சிலியில் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என்று ஜனாதிபதி கேப்ரியல் போரிக் அறிவித்துள்ளார்.
பெரும் பணக்காரரான இவர் இரண்டு முறை சிலி நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
