முச்சக்கரவண்டி விபத்தில் குழந்தை பலி! தாய் மற்றும் தந்தை படுகாயம்
மொனராகலையில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒரு வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதோடு அந்தக் குழந்தையின் தந்தையும், தாயும் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து நேற்று(21.01.2025) செவ்வாய்க்கிழமை மாலை மொனராகலை மாவட்டம், செவனகலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குடும்பத்தினர் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வேகக் கடுப்பாட்டை இழந்து வீதியில் இருந்து விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரு வயது ஆண் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற குழந்தையின் தந்தையும்(வயது 36), பின் ஆசனத்தில் குழந்தையை மடியில் வைத்திருந்த தாயும்(வயது 28) படுகாயங்களுடன் செவனகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam