வடக்கில் 5 ஆண்டுகளில் 742 சிறுவர் துஷ்பிரயோகம்! - சிறுவர் நன்னடத்தை திணைக்களம் தகவல்
வடக்கு மாகாணத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 742 சிறுவர்கள் பாலியல் ரீதியாகவும், உடலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் இளவயது கர்ப்பம் காரணமாக 49 சிறுமிகள் பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான துஷ்பிரயோக சம்பவங்கள் ஒவ்வொரு ஆண்டும் பதிவாகியுள்ளன.
2018ஆம் ஆண்டு பாலியல் ரீதியாக 105பேரும், உடலியல் ரீதியாக 91 பேரும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
2019ஆம் ஆண்டு 106 பேர் பாலியல் ரீதியாகவும், 65 பேர் உடலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

2020ஆம் ஆண்டு பாலியல் ரீதியாக 118 பேரும், உடலியல் ரீதியாக 52 பேரும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு பாலியல் ரீதியாக 123 பேரும், உடலியல் ரீதியாக 15 பேரும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம் வரையில் பாலியல் ரீதியாக 59 பேரும், உடலியல் ரீதியாக 8 பேரும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
ஜேர்மனியை பிரித்தானியா முதலான நாடுகளுடன் இணைக்கும் புதிய எரிவாயுக்குழாய் திட்டம் துவக்கம் News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri