கோழி இறைச்சி விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
இரண்டு மாதத்திற்குள் கோழி இறைச்சி விலையில் மாற்றம் செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (04.10.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே வர்த்தக அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வரிச்சலுகை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஒரு கிலோ கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு வழங்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கால்நடை தீவனத்திற்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களும் மக்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தேவைப்பட்டால் தொடர்ந்தும் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.





சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri
