மகிந்த - சந்திரிக்காவின் இனவெறியாட்டத்தின் பின்னணியில் ஜேவிபி.. அம்பலமான உண்மைகள்!
மகிந்த ராஜபக்சவையும்-சந்திரிக்காவையும் தூண்டிவிட்டு இனவெறியாட்டத்தையும்-கொலை வெறியாட்டத்தையும் நடத்தி முடித்தவர்களே இந்த பிமல்ரத்தனாயக்க மற்றும; அநுர உள்ளிட்ட ஜேவிபியினர் தான் என்று சட்டத்தரணி சுகாஷ் கனகரத்தினம் தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஜேவிபி- என்பிபி அரசாங்கத்தினர் ஒன்றும் புனிதர்கள் அல்ல.
இவர்களும் கடந்த ஆட்சியாளர்களான மகிந்த-ரணில்- சந்திரிக்கா போன்றவர்களின் பங்காளிகளாக இருந்தவர்கள் எனவே, அவர்கள் அதற்கு பொறுப்புக்கூறவேண்டும்.
இவர்கள் தற்போது இந்த விடயத்தை பற்றி பேசுவது ஆடு நனைகின்றது என்று ஓநாய்கள் அழுவது போல உள்ளது.
தாங்களே தமிழர்களை கொன்றுவிட்டு தற்போது ஒன்று தெரியாதவர்கள் போல் பேசுகின்றார்கள் என்றார்.
இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...
பிள்ளையானும் இனியபாரதியும் கிழக்கில் ஏற்படுத்திய இருண்டயுகம்! உயிர்பிழைத்த ஊடகவியலாளரின் வாக்குமூலம்
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan