இலங்கையின் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல் 4 இற்கு கோட்டாபய வழங்கிய பதில்

2019 Sri Lanka Easter bombings Gotabaya Rajapaksa Easter Attack Sri Lanka Sivanesathurai Santhirakanthan
By Benat Sep 07, 2023 09:00 PM GMT
Report

சனல் 4 தற்போது வெளியிட்டுள்ள காணொளியானது இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட காணொளிகளைப் போன்று  பொய்களைக் கொண்டது என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

என்னை ஜனாதிபதியாக்குவதற்காக இஸ்லாமிய தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டார்கள் என தெரிவிப்பது அபத்தமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.   

கோட்டாபயவை கோபப்படுத்திய செய்தி: உடன் பிறப்பிக்கப்பட்ட கட்டளை - வெளியான அதிர்ச்சி தகவல்

கோட்டாபயவை கோபப்படுத்திய செய்தி: உடன் பிறப்பிக்கப்பட்ட கட்டளை - வெளியான அதிர்ச்சி தகவல்

2019ஆம் இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பல்வேறு விடயங்களை அம்பலப்படுத்தி, பிரித்தானியாவில் உள்ள சனல் 4 ஊடகம் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அம்பலப்படுத்தப்பட்ட சதித்திட்டங்கள்

இந்தப்படத்தில், தற்போதைய இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனிடம் பணியாற்றிய ஆசாத் மௌலானா, கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர் உருவாக்கிய குழு, பிள்ளையான் அவர்கள் இணைந்து தீட்டிய சதித்திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்களை இந்த காணொளியில் அம்பலப்படுத்தியிருந்தார். 

இலங்கையின் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல் 4 இற்கு கோட்டாபய வழங்கிய பதில் | Channel4 Telecast Shocking Video Gotabaya

இந்தநிலையில், குறித்த காணொளி இலங்கை அரசியலில் பரபரப்பான நிலையை தோற்றுவித்துள்ளதுடன், இது குறித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விளக்கமளித்துள்ளார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சனல் 4இன் சமீபத்தைய ஆவணப்படம் 2005ஆம் ஆண்டிலிருந்து ராஜபக்ச குடும்பத்தின் பாரம்பரியத்தை அழிப்பதை இலக்காக கொண்ட முயற்சிகளின் தொடர்ச்சியாகும். இந்த வீடியோ சனல் 4 வெளியிட்ட முன்னைய வீடியோ போன்று பொய்களை கொண்டது.

என்னை ஜனாதிபதியாக்குவதற்காக இஸ்லாமிய தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டார்கள் என தெரிவிப்பது அபத்தமானது.

தனிப்பட்ட நபர்கள் சிலர் எனக்கு எதிராக அரசியல் நோக்கங்களை கொண்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்ற போதிலும் நான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கத்தோலிக்க திருச்சபைக்கு உதவுவதற்காக அனைத்தையும் செய்தேன் என  தெரிவித்துள்ளார். 

சனல் 4 அம்பலப்படுத்தும் தகவல்கள்: லசந்த மகள் விடுத்த கோரிக்கை - செய்திகளின் தொகுப்பு

சனல் 4 அம்பலப்படுத்தும் தகவல்கள்: லசந்த மகள் விடுத்த கோரிக்கை - செய்திகளின் தொகுப்பு

குறித்த அறிக்கையில் மேலும்,

இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் - இலக்குகளுக்குரிய அனுப்புதல்கள் எனும் அர்த்தப்படுத்தலிலான ஆவணப்பதிவொன்றை கடந்த செவ்வாய்க்கிழமை பிரித்தானிய ஊடகமான சனல்-4 வெளியிட்டிருந்தது.

இந்த காணொளியில் கருத்து வெளியிட்ட  இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் முன்னாள் ஊடக செயலாளரான கன்சீர் அசாத் மௌலானா, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்குடன் நாட்டில் நிலையற்ற தன்மையை ஏற்படுவதை இலக்காக கொண்டு உயிர்த்த ஞாயிறு சதி நடவடிக்கையை அரங்கேற்றியதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், ராஜபக்சக்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியிருந்த சனல்-4 ஊடகம் தற்போது மீண்டும் அதன் பணியை தொடருவதாகவும் கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது

ராஜபக்சக்களின் வரலாற்றில் கரும்புள்ளிகளை உருவாக்கும் நோக்கில் குறித்த ஊடகம் இந்த ஆவணப்பதிவை வெளியிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். தம்மை ஜனாதிபதியாக்கும் நோக்கில் இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல் 4 இற்கு கோட்டாபய வழங்கிய பதில் | Channel4 Telecast Shocking Video Gotabaya

அரசியல் ரீதியில் தமக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை தாண்டி, தமது ஆட்சிக் காலத்தின் போது கத்தோலிக்க சமூகத்தினருடன் சிறந்த உறவுகளை கொண்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது சேதமடைந்த தேவாலயங்கள் மற்றும் இஸ்லாமிய பள்ளிவாசல்களை மீண்டும் நிர்மாணிக்க தாம் நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான பயணத்தை பாப்பரசர் மேற்கொள்வதற்கும் தாம் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதேவேளை,  ராணுவத்தின் மூத்த உளவுத்துறை அதிகாரி சுரேஷ் சலேக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை கோட்டாபய ராஜபக்ச நிராகரித்துள்ளதோடு, அவர் தமக்கு விசுவாசமான ஒரு அதிகாரி என்பதையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தீவிரவாதியின் தலையை புதைப்பதற்கு எதிராக போராடிய வியாழேந்திரனின் முடிவு என்ன (Video)

உயிர்த்த ஞாயிறு தீவிரவாதியின் தலையை புதைப்பதற்கு எதிராக போராடிய வியாழேந்திரனின் முடிவு என்ன (Video)

கடந்த 2015 ஆம் ஆண்டு பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து, மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் வரை சுரேஷ் சலேவுடன் தாம் எந்தவொரு தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சுரேஸ் சலே இந்தியாவில் இருந்ததாகவும்  பாதுகாப்பு அமைச்சின் செயல்பாடுகளில் அவர் தலையிடவில்லை எனவும் கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

தாம் மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் சுரேஸ் சலேயை தொடர்பு கொண்டு, அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நாயகமாக நியமித்ததாக  தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சுரேஸ் சலே குண்டுத்தாரிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் கட்டுக்கதைகள் என அவர் கூறியுள்ளார்.

மேலும்,  ஜனாதிபதியாக தாம் பதவியேற்றதன் பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை தடுத்து நிறுத்தியதாக சனல்-4வால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாதென கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.   

கோட்டாபயவுடன் இருக்கும் பிள்ளையான் மற்றும் ஆசாத் மௌலானா : புகைப்பட ஆதாரம் தொடர்பில் வெளியான தகவல்

கோட்டாபயவுடன் இருக்கும் பிள்ளையான் மற்றும் ஆசாத் மௌலானா : புகைப்பட ஆதாரம் தொடர்பில் வெளியான தகவல்

சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி: இலங்கை அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கை

சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி: இலங்கை அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கை

விடுதலைப் புலிகளின் தலைவரை விடுவிக்காததால் சனல் 4 எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகளின் தலைவரை விடுவிக்காததால் சனல் 4 எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

மீசாலை, Basel, Switzerland

25 Jan, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்புத்துறை, கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, காரைநகர், Birmingham, United Kingdom, Croydon, United Kingdom

21 Jan, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, சண்டிலிப்பாய், ஜேர்மனி, Germany, ஓமான், Oman, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

18 Jan, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல் கிழக்கு, London, United Kingdom

30 Dec, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, வவுனியா

06 Feb, 2013
6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, சுவிஸ், Switzerland

29 Jan, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சுவிஸ், Switzerland

29 Jan, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Anaipanthy, அரியாலை, பிரான்ஸ், France

29 Jan, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

27 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Zürich, Switzerland

25 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, Kuala Lumpur, Malaysia

26 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, சிவபுரம், வவுனிக்குளம், வவுனியா, பாண்டியன்குளம்

26 Jan, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Toronto, Canada

11 Feb, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

22 Jan, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், திருச்சி, India

29 Jan, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Lausanne, Switzerland

28 Jan, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Scarborough, Canada

27 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, தெஹிவளை

07 Feb, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kingston, United Kingdom, Wallington, United Kingdom

30 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், நோர்வே, Norway

16 Jan, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, சிட்னி, Australia, Thun, Switzerland

08 Feb, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Washington, United States

19 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Bremgarten, Switzerland

24 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

28 Jan, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, பேர்ண், Switzerland

30 Jan, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US