இலங்கையின் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல் 4 இற்கு கோட்டாபய வழங்கிய பதில்

2019 Sri Lanka Easter bombings Gotabaya Rajapaksa Easter Attack Sri Lanka Sivanesathurai Santhirakanthan
By Benat Sep 07, 2023 09:00 PM GMT
Report

சனல் 4 தற்போது வெளியிட்டுள்ள காணொளியானது இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட காணொளிகளைப் போன்று  பொய்களைக் கொண்டது என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

என்னை ஜனாதிபதியாக்குவதற்காக இஸ்லாமிய தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டார்கள் என தெரிவிப்பது அபத்தமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.   

கோட்டாபயவை கோபப்படுத்திய செய்தி: உடன் பிறப்பிக்கப்பட்ட கட்டளை - வெளியான அதிர்ச்சி தகவல்

கோட்டாபயவை கோபப்படுத்திய செய்தி: உடன் பிறப்பிக்கப்பட்ட கட்டளை - வெளியான அதிர்ச்சி தகவல்

2019ஆம் இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பல்வேறு விடயங்களை அம்பலப்படுத்தி, பிரித்தானியாவில் உள்ள சனல் 4 ஊடகம் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அம்பலப்படுத்தப்பட்ட சதித்திட்டங்கள்

இந்தப்படத்தில், தற்போதைய இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனிடம் பணியாற்றிய ஆசாத் மௌலானா, கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர் உருவாக்கிய குழு, பிள்ளையான் அவர்கள் இணைந்து தீட்டிய சதித்திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்களை இந்த காணொளியில் அம்பலப்படுத்தியிருந்தார். 

இலங்கையின் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல் 4 இற்கு கோட்டாபய வழங்கிய பதில் | Channel4 Telecast Shocking Video Gotabaya

இந்தநிலையில், குறித்த காணொளி இலங்கை அரசியலில் பரபரப்பான நிலையை தோற்றுவித்துள்ளதுடன், இது குறித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விளக்கமளித்துள்ளார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சனல் 4இன் சமீபத்தைய ஆவணப்படம் 2005ஆம் ஆண்டிலிருந்து ராஜபக்ச குடும்பத்தின் பாரம்பரியத்தை அழிப்பதை இலக்காக கொண்ட முயற்சிகளின் தொடர்ச்சியாகும். இந்த வீடியோ சனல் 4 வெளியிட்ட முன்னைய வீடியோ போன்று பொய்களை கொண்டது.

என்னை ஜனாதிபதியாக்குவதற்காக இஸ்லாமிய தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டார்கள் என தெரிவிப்பது அபத்தமானது.

தனிப்பட்ட நபர்கள் சிலர் எனக்கு எதிராக அரசியல் நோக்கங்களை கொண்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்ற போதிலும் நான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கத்தோலிக்க திருச்சபைக்கு உதவுவதற்காக அனைத்தையும் செய்தேன் என  தெரிவித்துள்ளார். 

சனல் 4 அம்பலப்படுத்தும் தகவல்கள்: லசந்த மகள் விடுத்த கோரிக்கை - செய்திகளின் தொகுப்பு

சனல் 4 அம்பலப்படுத்தும் தகவல்கள்: லசந்த மகள் விடுத்த கோரிக்கை - செய்திகளின் தொகுப்பு

குறித்த அறிக்கையில் மேலும்,

இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் - இலக்குகளுக்குரிய அனுப்புதல்கள் எனும் அர்த்தப்படுத்தலிலான ஆவணப்பதிவொன்றை கடந்த செவ்வாய்க்கிழமை பிரித்தானிய ஊடகமான சனல்-4 வெளியிட்டிருந்தது.

இந்த காணொளியில் கருத்து வெளியிட்ட  இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் முன்னாள் ஊடக செயலாளரான கன்சீர் அசாத் மௌலானா, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்குடன் நாட்டில் நிலையற்ற தன்மையை ஏற்படுவதை இலக்காக கொண்டு உயிர்த்த ஞாயிறு சதி நடவடிக்கையை அரங்கேற்றியதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், ராஜபக்சக்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியிருந்த சனல்-4 ஊடகம் தற்போது மீண்டும் அதன் பணியை தொடருவதாகவும் கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது

ராஜபக்சக்களின் வரலாற்றில் கரும்புள்ளிகளை உருவாக்கும் நோக்கில் குறித்த ஊடகம் இந்த ஆவணப்பதிவை வெளியிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். தம்மை ஜனாதிபதியாக்கும் நோக்கில் இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல் 4 இற்கு கோட்டாபய வழங்கிய பதில் | Channel4 Telecast Shocking Video Gotabaya

அரசியல் ரீதியில் தமக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை தாண்டி, தமது ஆட்சிக் காலத்தின் போது கத்தோலிக்க சமூகத்தினருடன் சிறந்த உறவுகளை கொண்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது சேதமடைந்த தேவாலயங்கள் மற்றும் இஸ்லாமிய பள்ளிவாசல்களை மீண்டும் நிர்மாணிக்க தாம் நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான பயணத்தை பாப்பரசர் மேற்கொள்வதற்கும் தாம் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதேவேளை,  ராணுவத்தின் மூத்த உளவுத்துறை அதிகாரி சுரேஷ் சலேக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை கோட்டாபய ராஜபக்ச நிராகரித்துள்ளதோடு, அவர் தமக்கு விசுவாசமான ஒரு அதிகாரி என்பதையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தீவிரவாதியின் தலையை புதைப்பதற்கு எதிராக போராடிய வியாழேந்திரனின் முடிவு என்ன (Video)

உயிர்த்த ஞாயிறு தீவிரவாதியின் தலையை புதைப்பதற்கு எதிராக போராடிய வியாழேந்திரனின் முடிவு என்ன (Video)

கடந்த 2015 ஆம் ஆண்டு பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து, மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் வரை சுரேஷ் சலேவுடன் தாம் எந்தவொரு தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சுரேஸ் சலே இந்தியாவில் இருந்ததாகவும்  பாதுகாப்பு அமைச்சின் செயல்பாடுகளில் அவர் தலையிடவில்லை எனவும் கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

தாம் மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் சுரேஸ் சலேயை தொடர்பு கொண்டு, அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நாயகமாக நியமித்ததாக  தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சுரேஸ் சலே குண்டுத்தாரிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் கட்டுக்கதைகள் என அவர் கூறியுள்ளார்.

மேலும்,  ஜனாதிபதியாக தாம் பதவியேற்றதன் பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை தடுத்து நிறுத்தியதாக சனல்-4வால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாதென கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.   

கோட்டாபயவுடன் இருக்கும் பிள்ளையான் மற்றும் ஆசாத் மௌலானா : புகைப்பட ஆதாரம் தொடர்பில் வெளியான தகவல்

கோட்டாபயவுடன் இருக்கும் பிள்ளையான் மற்றும் ஆசாத் மௌலானா : புகைப்பட ஆதாரம் தொடர்பில் வெளியான தகவல்

சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி: இலங்கை அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கை

சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி: இலங்கை அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கை

விடுதலைப் புலிகளின் தலைவரை விடுவிக்காததால் சனல் 4 எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகளின் தலைவரை விடுவிக்காததால் சனல் 4 எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US