உயிர்த்த ஞாயிறு தீவிரவாதியின் தலையை புதைப்பதற்கு எதிராக போராடிய வியாழேந்திரனின் முடிவு என்ன (Video)
அண்மையில் சனல் 4 ஆவண தொகுப்பு தொடர்பில் வெளியான காணொளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும் பிள்ளையானை மையப்படுத்திய விடயங்களும் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த விடயமானது இலங்கையிலும் சர்வதேச அளவிலும் பெரிதும் பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில், சனல் 4 வெளியிட்ட காணொளி குறித்து மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நகரசபை மேயர் தியாகராஜ சரவணபவன் சில கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
கிழக்கை அபிவிருத்தி பாதையில் கொண்டு வருவேன் என முன்வந்த சில அரசியல்வாதிகள் இன்று மக்களை கொன்று கோட்டாபயவை ஆட்சிபீடம் ஏற்றியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களில் உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்கவும் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் முன்னாள் நகரசபை மேயர் தியாகராஜ சரவணபவன் தெரிவித்த மேலும் பல முக்கிய விடயங்களை உள்ளடக்கி வருகிறது இந்த காணொளி...
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan