கொலை குழு ஒன்றை உருவாக்கிய கோட்டாபய : சனல்4 காணொளியில் அம்பலமான இரகசியங்கள்
திரிபோலி என்ற கொலை குழுவை உருவாக்குமாறு கோட்டாபய ராஜபக்ச எங்களிடம் கேட்டுக் கொண்டார் என ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொர்பில் சனல்4 வெளியிட்ட காணொளியில் ஆசாத் மௌலானா இது குறித்து விபரித்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.
அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல் 4 காணொளி: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிவரும் உண்மைகள்(Video)
கோட்டாபய விடுத்த கோரிக்கை
மேலும் தெரிவிக்கையில்,
நானும் அந்த சமயம் என்னுடைய தலைவராக இருந்த பிள்ளையானும் கோட்டாபயவை சந்தித்தவேளை எங்களிடம் அவர் திரிபோலி என்ற கொலைகுழுவை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டார்.

திறமைசாலிகளை தெரிவு செய்து இணைந்து செயற்படுங்கள் என கோட்டாபய எங்களிடம் தெரிவித்தார்.
இதன் காரணமாக பிள்ளையான் தன்னுடைய நபர்களைக் கொண்டு திரிபோலி என்ற கொலைக் குழுவை உருவாக்கினார்.
அதன் பின்னர் கோட்டாபய ராஜபக்சவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் திரிபோலி கொலைகுழு செயற்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri