எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி! இறக்குமதி பொருட்களின் விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்
இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையில் அதிகரிப்பு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வர்த்தக பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி! இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பொருட்களின் விலை அதிகரிப்பு
உலகளாவிய ரீதியில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இலங்கையில் பொருட்களின் விலை அதிகரிப்பதை தவிர்க்க முடியாத நிலை காணப்படுவதாகவும்், இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, தடையின்றிப் பொருட்களை விநியோகிப்பதற்காக இதுவரை பொருட்களை இறக்குமதி செய்த நாடுகளுக்கு மேலதிகமாக, ஏனைய நாடுகளிலிருந்தும் பொருட்களை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் விளக்கமளித்துள்ளார்.
தற்போது நிலவும் போர்ச் சூழல் உலகின் ஏனைய நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் மற்றும் ஏனையப் பொருட்களின் போக்குவரத்தில் இது தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. தற்போது ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 100 டொலரை எட்டியுள்ளது.
எரிபொருள் விலை மற்றும் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்
எரிபொருள் விலை மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சில குறைபாடுகள் காரணமாக விநியோக வலையமைப்பில் பாதிப்பு ஏற்படலாம். இதனால் பொருட்களை இறக்குமதி செய்யும் போது அவற்றின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கம் இது குறித்து அதிக கவனம் செலுத்தி வருகிறது. விநியோகத்தைத் தடையின்றிப் பேணுவதற்காகப் புதிய நாடுகளிடம் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
எனவே, பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருக்கும் எனவும், சில காரணிகளினால் விலைகளில் ஓரளவு அதிகரிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.