நாட்டில் மதுபான நுகர்வில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நாட்டில் மதுபான நுகர்வில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதுபான நுகர்வு வீழ்ச்சி
உணவு பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக நாட்டில் மதுபான நுகர்வு வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த நிலையில் சுமார் 20 முதல் 30 வீதம் வரையில் மதுபான நுகர்வு வீழ்ச்சியடைந்துள்ளது.
22 பில்லியன் ரூபா வருமானம்
மதுவரித் திணைக்களத்தின் அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு மதுவரித் திணைக்களத்திற்கு கிடைக்கவிருந்த 22 பில்லியன் ரூபா வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.