சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ள மூதாட்டி
யாழ்ப்பாணம் - வேலணை 6ஆம் வட்டார பகுதியிலுள்ள வீடொன்றில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த 68 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட மதுபான தொகைகள்
குறித்த மூதாட்டியின் வீட்டில் இருந்து 750 மில்லி லீட்டர் கொள்ளளவு கொண்ட மதுபான போத்தல்கள் நான்கும், 180 மில்லி லீட்டர் கொள்ளளவு கொண்ட 12 மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நீதிமன்றில் முன்னிலை
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.