சந்திரயான் - 3 விண்கலத்தின் குழுவுக்கு அமெரிக்காவில் விருது
சந்திரயான் -3 (chandrayaan-3) திட்டத்தினை செயற்படுத்திய குழுவுக்கு விண்வெளி ஆராய்ச்சிக்காக மிகவும் மதிப்புவாய்ந்த ஜோன் எல். 'ஜேக் ஸ்விகெர்ட் ஜூனியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
சந்திரயான் -3 விண்கலம் மூலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
சந்திரயான் -3 திட்டத்திற்கு விருது
இந்நிலையில், அமெரிக்காவில்(America) கொலரோடாவில் நடைப்பெற்ற வருடாந்த விண்வெளி கருத்தரங்கில் குறித்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது வழங்கப்பட்ட விருதினை இஸ்ரோ சார்பில் ஹூஸ்டன் நகரில் உள்ள இந்திய துணை தூதர் டி.சி.மஞ்சுநாத் பெற்றுக்கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |