வடக்கு - கிழக்கு மக்கள் முகம்கொடுக்கும் சவால்கள் : எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் முக்கிய பேச்சு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கவனத்தில் கொள்ளப்பட்டன.
அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் பிரச்சினைகள்
குறிப்பாக, இம்மாகாண மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சமூக, பொருளாதார மற்றும் அபிவிருத்திப் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிராந்திய மட்டப் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளை நாடாமன்றத்தில் பரந்தளவில் முன்வைப்பது மற்றும் அவற்றுக்கான அவசியமான அரசியல் மற்றும் சமூகத் தலையீடுகளைச் செய்வது தொடர்பாகவும் இந்தச் சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் எம்.எல்.எம். ஹிஸ்புல்லா, எம்.எஸ்.ஏ. வாஸீத், எம்.டி.எம். தாஹிர், துறைராசா ரவிகரன், இம்ரான் மஹ்ரூப், எம்.எஸ். உதுமாலெப்பை, ரவூப் ஹக்கீம், வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், காதர் மஸ்தான், செல்வம் அடைக்கலநாதன், மனோ கணேசன் உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.




பிட்டு - இடியப்பம் விற்பனை செய்தவரின் மாடித் தோட்டம்! சுற்றிவளைத்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan