தகவல் அறியும் உரிமைகள் ஆணைக்குழு தலைவர் நியமனம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையின் தகவல் அறியும் உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தலைவர் ஒருவரை நியமிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதை ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் தொழில்வல்லுநர்களின் கொழும்பு கிளையின் பொதுச் செயலாளர் டெலான் டி சில்வா விமர்சித்துள்ளார்.
இது ஜனநாயக பொறுப்புக்கூறலுக்கு அச்சுறுத்தல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிப்படைத்தன்மை
கடந்த மார்ச் மாதம் முதல் இந்தப் பதவி வெற்றிடமாக உள்ளது. இதனால் ஆணைக்குழுபயனற்றதாக உள்ளது.
ஊழலை அம்பலப்படுத்துவதில் ஆணைக்குழுவின் கடந்த கால பங்கை நினைவுகூர்ந்துள்ள டெலான் டி சில்வா, ஆணைக்குழுவுக்கு தலைவர் நியமிக்கப்படாமை அதன் வெளிப்படைத்தன்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது எனவும் பொது மேற்பார்வையை பலவீனப்படுத்துகிறது எனவும் எச்சரித்துள்ளார்.
இந்த விடயத்தில் அரசியலமைப்பு பேரவை விரைவாகச் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர் சிவில் சமூகம் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.





உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan
