இங்கிலாந்தின் மன்னருக்கு தொடர்ந்தும் விநியோகிக்கப்படும் இலங்கை தேயிலை
பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் இந்த வாரம் லண்டனில் (London) நடைபெற்ற விழாவில் மூன்றாம் சார்லஸ் மன்னரை(Charles III)சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது மன்னர் நுவரெலியா மற்றும் மெக்வூட்ஸ் தேயிலை தோட்டத்திற்கு தாம் மேற்கொண்ட விஜயத்தை அவர்களிடம் நினைவு கூர்ந்துள்ளார்.
தேயிலை விநியோகம்
அத்துடன் இலங்கையில் இருந்து தமக்கு வழக்கமான தேயிலை விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மன்னர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் தாம் அறிந்துள்ளதாக மன்னர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மன்னருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக பிரித்தானியாவிற்கு சென்ற பின்னரும் தனது நற்சான்றிதழ்களை சமர்ப்பிக்க முடியாத உயர்ஸ்தானிகர் போகொல்லாமக, இந்த மாத இறுதியில் பக்கிங்ஹாம் அரண்மனையில் வைத்து அதனை சமர்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam