மத்திய வங்கியின் ஆளுநரை கடுமையாக விமர்சித்த உதய கம்மன்பில: செய்திகளின் தொகுப்பு
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நாணயம் அச்சிடலுக்கு அடிமையாகியுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சபையில் தெரிவித்துள்ளார்.
கப்ராலின் சாதனையை இவர் குறுகிய காலத்திற்குள் முறியடித்துள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆகவே மத்திய வங்கியின் ஆளுநரையும், இந்த அரசாங்கத்தையும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு அனுப்ப வேண்டும். மத்திய வங்கியின் ஆளுநருக்கும்,ஜனாதிபதிக்கும் சொல்வதை செய்யும் பழக்கம் கிடையாது.
எல்லையற்ற நாணயம் அச்சிடல் பணவீக்கத்தை அதிகரித்து பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தியதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்நலால் வீரசிங்க பதவி ஏற்ற போது குறிப்பிட்டார். ஆனால் இவரே குறுகிய காலத்தில் அதிக நாணயம் அச்சிட்ட மத்திய வங்கி ஆளுநராக வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam