நீண்ட கால தீர்வை முன்வைத்துள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்: நெருக்கடி தொடருமென எச்சரிக்கை
தற்போது திட்டமிடப்பட்டுள்ள பிரதான பிரச்சினைகளை அடுத்த 6 அல்லது 7 மாதங்களுக்குள் தீர்க்க முடியுமானால் இலங்கையின் பொருளாதாரத்தை சுமார் 12 மாதங்களில் ஸ்திரப்படுத்த முடியுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் வெளிநாட்டு கடனை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையை அடுத்த 6 முதல் 7 மாதங்களுக்குள் நிறைவு செய்ய முடியுமாயின் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அந்நிய செலவணியை செலவழிப்பதை விட அந்நிய செலாவணியை ஈட்டும் நாடாக இலங்கையை மாற்றுவதே தற்போதைய நெருக்கடிக்கு நீண்ட கால தீர்வாகும்.
இதன்படி இலங்கையின் அந்நிய செலாவணி ஈட்டும் திறனை நடுத்தர மற்றும் நீண்ட கால அளவில் மேம்படுத்த வேண்டும்.
அவ்வாறு இல்லாதவிடத்து இலங்கையின் தற்போதைய நெருக்கடி தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்துவதில் பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டு கடன்களை மீள திருப்பி செலுத்துவதற்கு கடன் வழங்கிய தரப்பிடம் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்காலத்தில் கடன் வழங்கிய தரப்புடன் உடன்பாடு எட்டப்படும் வரை வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்துவதற்கு அந்நிய செலாவணி தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி ஆளுநரின் விசேட கோரிக்கை |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நாளை என்ன நடக்கும்..! அச்சத்தில் இலங்கை மக்கள் 2 நாட்கள் முன்

சிக்சர் அடிக்க பார்த்த இந்திய கேப்டன் தினேஷ் கார்த்திக்! விழுந்து புரண்டு கேட்ச் செய்த வீரரின் வீடியோ News Lankasri

சொந்த ஊரில் இருக்கும் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள் Cineulagam

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருண் தனது காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்- முதன்முறையாக வெளியான போட்டோ Cineulagam

விஜய், அஜித், விக்ரம் என முவரும் நிராகரித்த திரைப்படம் ! சூர்யா நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஆன கதை.. Cineulagam
