சீமெந்தின் விலையும் உயர்த்தப்பட்டது! வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்
50KG சீமெந்து பொதியொன்றின் விலையானது 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம், 50KG சீமெந்து பொதியொன்றின் புதிய விலையானது 2,450 ரூபாவாக அதிகரித்துள்ளது.
மேலும், நாட்டில் வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினாலேயே சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நியாயமற்ற விலை அதிகரிப்பு
அதேவேளை, குறித்த விலை அதிகரிப்பானது நியாயமற்றது என தேசிய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் தலைவர் சுபுன் அபேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், வற் வரியானது 3%ஆல் அதிகரித்துள்ள அதேவேளை சீமெந்து பொதியின் விலை அதிகரிப்பானது வரி அதிகரிப்பு சதவீதத்தை விட அதிகாமாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து, கட்டுமான உபகரணங்களின் விலையும் வருகின்ற நாட்களில் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 7 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam