சீமெந்தின் விலையும் உயர்த்தப்பட்டது! வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்
50KG சீமெந்து பொதியொன்றின் விலையானது 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம், 50KG சீமெந்து பொதியொன்றின் புதிய விலையானது 2,450 ரூபாவாக அதிகரித்துள்ளது.
மேலும், நாட்டில் வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினாலேயே சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நியாயமற்ற விலை அதிகரிப்பு
அதேவேளை, குறித்த விலை அதிகரிப்பானது நியாயமற்றது என தேசிய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் தலைவர் சுபுன் அபேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், வற் வரியானது 3%ஆல் அதிகரித்துள்ள அதேவேளை சீமெந்து பொதியின் விலை அதிகரிப்பானது வரி அதிகரிப்பு சதவீதத்தை விட அதிகாமாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து, கட்டுமான உபகரணங்களின் விலையும் வருகின்ற நாட்களில் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam