பொரள்ளை தேவாலய குண்டு வைப்பு சம்பவம்! புதிய விசாரணையை கோரும் திருச்சபை
கொழும்பு பொரள்ளையில் அமைந்துள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற "வெடிகுண்டு நாடகம்" குறித்து புதிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு இலங்கை கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
2022 ஜனவரி 11 அன்று தேவாலயத்திற்குள் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நேற்று காலை போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
மனித உரிமைகள்
முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக தேவாலயத்தின் பராமரிப்பாளர் அப்போது கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
எனினும் இந்தச் செயல்களால் அவர் துன்புறுத்தப்பட்டதாகவும் அவரது மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் திருச்சபை பின்னர் குற்றம் சுமத்தியிருந்தது.
இந்தநிலையில் நேற்று இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த தேசிய கத்தோலிக்க தகவல் தொடர்பு இயக்குநர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த, இந்த சம்பவம் குறித்து புதிய விசாரணை நடத்துமாறு, தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம், திருச்சபை வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியின் போது ஒரு சந்தேகநபர் பிடிபட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சந்தேகநபர் குறித்து தற்போதைய அரசாங்கம் என்ன செய்யும் என்பதைப் பார்க்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை
அத்துடன் இந்த விடயத்தில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியவை என்றும் அருட்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சம்வத்தின் பின்னர், மாலையில் பதிவான சிசிடிவி காட்சிகளை மட்டுமே பார்க்க வேண்டும் என்று தென்னகோன் அறிவுறுத்தியிருந்தார்.
எனினும் காலையில் பதிவான மற்றொரு காணொளியில், குற்றவாளி,தேவாலயத்திற்குள் வெடிகுண்டை வைப்பது கண்டறியப்பட்டது என்று அருட்தந்தை ஜூட் கிரிசாந்த தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 14 மணி நேரம் முன்

Record Breaking வியாபாரம் ஆனது ரஜினியின் கூலி படம்... யார் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள் தெரியுமா? Cineulagam

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri
