திடீரென 2000 ரூபாவாக அதிகரித்த புளியின் விலை! வியாபாரிகள் கொடுக்கும் விளக்கம்
ஹட்டனில் ஒரு கிலோ புளி 2000 ரூபாவுக்கு சில்லறை விலையில் விற்பனை செய்ய வேண்டியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தையில் புளிக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாகவே இவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
புளிக்கான அறுவடை
வழக்கமாக ஒரு கிலோ புளி, அதிகபட்ச சில்லறை விலையாக ரூபா 350 முதல் 400 இற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படும்.
ஆனால் நேற்று(12) ஒரு கிலோ புளி, 2,000 ரூபாவுக்கு சில்லறை விலையில் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த நாட்களில் புளிய மரங்களில் அறுவடை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மார்ச் மாத இறுதியில் புளிக்கான அறுவடை முடியும் வரை இந்த பற்றாக்குறை தொடரும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

ரோஜா ரோஜா பாடல் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிய பார்க்க வைத்த இளைஞன்.. யார் இவர் Cineulagam

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
