விமலின் கருத்துக்கு எதிராக கத்தோலிக்க திருச்சபை கண்டனம்
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச, அண்மையில் தனியார் ஊடக அலைவரிசையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு தெரிவித்த கருத்து தொடர்பில் கத்தோலிக்க திருச்சபை எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்த கத்தோலிக்க திருச்சபை இதனை கூறியுள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் பாதிரியார் சிரில் காமினி பெர்னாண்டோ கூறுகையில்,
ஈஸ்டர் தாக்குதல்
“ஈஸ்டர் தாக்குதல் நடந்த நாளில் கார்டினல் வரலாற்றில் முதல் முறையாக ஆராதனையில் கலந்து கொள்ளவில்லை என்று விமல் வீரவன்ச கூறியது, தாக்குதல் குறித்து கார்டினலுக்குத் தெரியும் என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

விமல் வீரவன்சவின் கூற்று முற்றிலும் தவறானது என்றும், ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போது முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ முதலில் பொய்யான அறிக்கையை வெளியிட்டார்.
இருப்பினும், ஹரின் பெர்னாண்டோவை மேலும் விசாரித்தபோது, அந்தக் கூற்று தவறானது மற்றும் ஆதாரமற்றது என்று அவர் ஒப்புக்கொண்டார்.
விமல் வீரவன்சவின் தொடர்ச்சியான தவறான அறிக்கைகள், சமூகத்தை தவறாக வழிநடத்தும் தொடர்ச்சியான முயற்சியின் விளைவாகத் தெரிகிறது.
மேலும் கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி தவறான அறிக்கைகளை வெளியிடுவது சட்டவிரோதமானது” என்று வலியுறுத்தியுள்ளார்.
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam