பிரித்தானியாவில் இந்த வருடத்திற்குள் நடைமுறையாகவுள்ள புதிய சட்டம்
16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களைத் தடைசெய்யும் சட்டத்தை பிரித்தானியா இந்த வருடமே அறிமுகப்படுத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான அபாயங்களுக்கு விரைவாக பதிலளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை
பிரித்தானிய பிரதமர்
பிரித்தானிய பிரதமர் Keir Starmer தலைமையிலான அரசு, இந்தத் தடை குறித்து பொதுமக்கள் கருத்துக் கணிப்பு செயல்முறையை தொடங்கியுள்ளது.
புதிய விதிமுறைகளை சில மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்துவதற்காக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தங்களை செய்யவும் அரசு செயல்பட்டு வருகிறது.
ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் இதேபோன்ற கட்டுப்பாடுகளை பரிசீலித்து வருகின்றன.

குழந்தைகள் தீங்கான ஆன்லைன் உள்ளடக்கங்களுக்கு அதிகம் ஆளாகின்றனர் என்ற கவலை அதிகரித்து வரும் நிலையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பிரித்தானியாவின் Online Safety Act உலகின் மிகவும் கடுமையான டிஜிட்டல் பாதுகாப்பு சட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
எனினும், இந்தச் சட்டம் AI சாட்பாட்களுடன் தனிப்பட்ட (one-to-one) தொடர்புகளை முழுமையாகக் கட்டுப்படுத்தவில்லை என்று கூறப்படுகின்றது. இந்த குறைபாடு விரைவில் சரிசெய்யப்படும் என்று தொழில்நுட்ப அமைச்சர் Liz Kendall தெரிவித்துள்ளார்.
16 வயதுக்குட்பட்ட குழந்தைகள்
“இந்த AI சாட்பாட்கள் குறித்து எனக்கும், பிரதமருக்கும் கவலை உள்ளது. இது குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து நாங்கள் அக்கறை கொள்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சில குழந்தைகள், குழந்தைகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படாத AI அமைப்புகளுடன் நேரடி உறவுகளை உருவாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“இந்தச் சட்டம் நிறைவேற கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் எடுத்தது. இத்தகைய குறைபாடுகளை தொடர்ந்து அனுமதிக்க முடியாது,” என்றும் Kendall வலியுறுத்தினார். அரசு ஜூன் மாதத்திற்குள் தனது முன்மொழிவுகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் அமைப்புகள் பிரித்தானிய சட்டங்களைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கே இருக்கும் என்று Kendall தெரிவித்தார்.
குழந்தைகள் பாதுகாப்பு சட்டம்
மேலும், ஒரு குழந்தை உயிரிழந்தால், ஒன்லைன் ஆதாரங்களைப் பாதுகாக்க தானியங்கி தரவு பாதுகாப்பு உத்தரவை (automatic data preservation orders) அறிமுகப்படுத்தும் திட்டமும் ஆலோசனையில் உள்ளது.
கேமிங் கன்சோல்களில் “அறிமுகமில்லாதவர்களுடன் இணைக்கும்” (stranger pairing) அம்சத்திற்கு கட்டுப்பாடுகள், நிர்வாண படங்களை அனுப்புதல் அல்லது பெறுதல் தடை செய்வது போன்ற நடவடிக்கைகளும் பரிசீலனையில் உள்ளன.

இந்த முன்மொழிவுகள் தற்போது நாடாளுமன்றத்தில் பரிசீலிக்கப்படும் குற்றம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்களில் திருத்தங்களாக சேர்க்கப்படவுள்ளன.
குழந்தைகள் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட இந்த நடவடிக்கைகள், பெரியவர்களின் தனியுரிமை மற்றும் சேவைகளுக்கான அணுகலை பாதிக்கக்கூடும் என்ற கவலையும் எழுந்துள்ளது.
மேலும், எந்த சேவைகள் “சமூக ஊடகம்” என வகைப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் அரசு தெளிவாக வரையறுக்க வேண்டியுள்ளது. அதற்கு பிறகே எந்தவொரு தடைச்சட்டமும் நடைமுறைக்கு வரும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam