நாட்டு மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய அநுர....! இப்படியொரு எளிமையான ஜனாதிபதி
இலங்கையின் ஜனாதிபதிகளில் சமகால ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மிகவும் மாறுபட்ட ஒரு தலைவராக மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவரின் செயற்பாடுகளில் இருந்து மாறுபட்டு, மக்களை கவர்ந்த ஒருவராக செயற்படுவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஜனாதிபதியின் செயற்பாட்டினை அடுத்து இந்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
எளிமையான ஜனாதிபதி
சித் ரூ-2025 கலை நிகழ்ச்சி நேற்று கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளின் அழகியல் திறமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக சமூக சேவைகள் திணைக்களத்தால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது விருது வழங்கும் போது மாற்று திறனாளி ஒருவருடன் புகைப்படம் எடுக்கும் போது, அரச தலைவர் என்ற நிலையை கடந்து, முட்டிக்காலில் அமர்ந்திருந்து திறமையாளரை மகிழ்வித்துள்ளார்.
மக்களுக்கான அரச தலைவர்
கடந்த காலங்களில் எந்தவொரு ஜனாதிபதியும் இவ்வாறான பணிவினை வெளிப்படுத்தி, மக்களுக்கான அரச தலைவர் என்பதை வெளிப்படுத்தவில்லை என பலரும் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்றதொரு நிகழ்வின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் விருது வாங்கிய மாற்றுத்திறனாளி ஒருவர், மிகவும் சிரமப்பட்டு அவரின் காலிற்கு கீழிருந்து விருது பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.










ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

ஆபத்தான நிலையில் ஈஸ்வரி, தனது அம்மாவுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி பிரியா.. குவியும் வாழ்த்துக்கள் Cineulagam
