100 மில்லியன் ரூபாய் இழப்பீடு..! முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் மீது மற்றுமொரு வழக்கு பதிவு
மூன்று மாதங்களுக்குள் ரூ. 100 மில்லியனைச் செலுத்துமாறு நீதிமன்றம் முன்னர் விதித்த நிபந்தனையை மீறிய குற்றத்திற்காக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிரீஸ் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்ததை அறிந்திருந்தும், 2012ஆம் ஆண்டில் கிரேக்கப் பத்திரங்களை வாங்கியதன் மூலம் ஆளுநர் அஜித் நிவர்த் கப்ரால், இலங்கை அரசாங்கத்திற்கு ரூ. 184 மில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியுள்ளார்.
100 மில்லியன் ரூபாய் இழப்பீடு
இதனைத் தொடர்ந்து, இழப்பை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மூன்று மாதங்களுக்குள் ரூ. 100 மில்லியனைச் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் அவர், குறித்த உத்தரவை மீறியதற்காக ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 67 (5)-இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ. 100 மில்லியனைச் செலுத்தும் நிபந்தனைக்கு உட்பட்டு வழக்கை மீண்டும் பெற இலஞ்ச ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தபோதிலும், ஒப்புக்கொள்ளப்பட்ட காலத்திற்குள் உரிய தொகையைச் செலுத்தி நிபந்தனையை நிறைவேற்ற வேண்டும் என கூறப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவர்த் கப்ரால் மீது இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO