மாநகர முதல்வரால் ஆணையாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு! (Video)
மாநகர முதல்வர் தி. சரவணபவனினால் தாக்கல் செய்யப்பட்ட தடையீட்டு எழுத்தாணை கூறும் விண்ணப்ப வழக்கானது இன்றைய தினம் மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி அ.அப்துல்லா தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது இவ் வழக்கானது எதிர்வரும் 2022 ஜனவரி 24ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்துள்ளார்.
குறித்த வழக்கு தொடர்பாக இன்றைய தினம் (6) முன்னிலையாகிய சிரேஷ்ட சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஊடகங்களுக்கு இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
எதிர் மனுதாரர்கள் சார்பில் சில ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டது. அதாவது மனுதாரர்கள் சார்பில் கோரப்பட்ட மாற்று சத்திய கூற்று பிரதிகள் தங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என்றும் குறித்த பிரதிகள் கிடைக்காத காரணத்தினால் உடனடியாக இந்த வழக்கை இறுதித் தீர்ப்பு கட்டளைக்கு நியமிக்குமாறு விண்ணப்பம் செய்து அதற்கு மேலதிகமாக ஒரு எழுத்து மூல சமர் பணத்தையும் திறந்த நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
விண்ணப்பம் தொடர்பில் தமது எதிர் சமர்ப்பண விண்ணப்பம் செய்திருந்திருந்ததாகவும், இதில்
மேன்முறையீட்டு நீதிமன்ற ஒழுங்கு விதிமுறைகளை சுட்டிக் காட்டி இருந்ததாகவும், அந்த
அடிப்படையில் அவதானித்த நீதிபதி குறித்த விடயம் தொடர்பாக
மாற்றுச் சக்தி கூற்று கிடைக்காத காரணத்தினால் தமது கட்டளைக்காக எதிர்வரும்
24ஆம் திகதி திகதி வழக்கை ஒத்திவைத்துள்ளார் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.