அன்றைய நிலை இன்று இல்லை: கோட்டாபயவிடம் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை விடுத்துள்ள கோரிக்கை
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட் சூழல் பாதிப்புக்கள் தொடா்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதியிடம் கோாியுள்ளார்.
கொழும்பு கடற்பரப்பில் ஏற்பட்ட பாதிப்புக்களை பாா்வையிடுவதற்காக இன்று சென்றிருந்தபோதே அவர் இந்தக்கோாிக்கையை விடுத்தார். இலங்கை எமது நாடு இது தொடா்பாக கதைப்பதற்கு உாிமையுள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் பல நாட்கள் தீப்பிடிக்க ஏன் இடமளிக்கப்பட்டது? ஏன் இழுத்துச்செல்லும் கப்பல்கள் மூலம் தீப்பிடித்த இந்தக்கப்பலை இழுத்துச்செல்ல முடியவில்லை? கம்பனிகாரா்களுக்கு அடிபணிய முடியாது. 1948க்கு முன்னா் இருந்து நிலை தற்போது இல்லை. இந்த நாடு சுயாதீனமான நாடு.
நாட்டின் இறைமை தொடா்பாக பேசுவதற்கு ஜனாதிபதிக்கு தொியவேண்டும். எனவே அவா்களுக்கு தலைகுனிய தேவையில்லை.
கப்பல்காரர்கள் போய் விடுவாா்கள். எனினும் இந்த சம்பவத்தினால் மீனவர்களே பாதிக்கப்பட்டுள்னர். அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும். பாதிக்கப்பட்ட இடங்கள் சுத்தப்படுத்தப்படவேண்டும் என்றும் கா்தினால் கோாிக்கை விடுத்துள்ளார்.