பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்: 26 வயது இளைஞர் கைது
திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறுபிட்டிகுளம் பகுதியில் மரவள்ளி தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்றிரவு (02.10.2023) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவி்த்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது எட்டு கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நிலாவெளி - சிறுபிட்டிகுளம் பகுதியில் வசித்து வரும் 26 வயதுடைய பிரபாகரன் நிரோஷன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கஞ்சா செடிகளுடன் திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
