புலம்பெயர்வோரின் எண்ணிக்கையை குறைக்கப்போகும் கனடா
பல ஆண்டுகளில் முதல் முறையாக நாட்டிற்குள் அனுமதிக்கப்படும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கனடா கடுமையாகக் குறைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஆட்சியில் தொடர்ந்தும் இருக்க முயற்சிக்கும் அரசாங்கத்தின் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா 2024இல் 485,000ஆக உள்ள நிரந்தர புலம்பெயர்வோர் எண்ணிக்கையை 2025இல் 395,000ஆக குறைக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தற்காலிக குடியிருப்பாளர்கள்
மேலும், அந்த எண்ணிக்கை 2026இல் 380,000 ஆகவும் 2027இல் 365,000 ஆகவும் குறைக்கும் என்று அந்த நாட்டின் அரசாங்க தரப்பை கோடிட்டு ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை 2025இல் சுமார் 30,000ஆக குறைக்கப்பட்டு 300,000ஆக இருக்கும் என்றும் அந்த தரப்பு குறிப்பிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ஈரானுக்கு மரண அடி உறுதி... பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு கொந்தளித்த இஸ்ரேல் News Lankasri