கனடாவில் அதிகரிக்கும் புகலிடம் கோருபவர்கள்: அரசாங்கம் நடவடிக்கை
கனடாவில் புகலிடம் பெறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக கனேடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம், 5,500 வெளிநாட்டு மாணவர்கள் கனடாவில் புகலிடம் கோரியுள்ளனர்.
இது கடந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடும் போது, 22 சதவீதம் அதிகம் என IRCC(Immigration, Refugees and Citizenship Canada) சுட்டிக்காட்டியுள்ளது.
புகலிடம்
கடந்த ஆண்டு மாத்திரம் 20,245 மாணவர்கள் புகலிடம் கோரியுள்ளனர். இது 2023ஆம் ஆண்டை விட இரண்டு மடங்கு எனவும் 2019ஆம் ஆண்டை விட 6 மடங்கு அதிகம் எனவும் கூறப்படுகின்றது.
குறிப்பாக, இந்தியா, நைஜீரியா, கென்யா, கானா மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் மாணவர்களே அதிகமாக புகலிடம் கோருகின்றனர். இதில் இந்தியா மட்டுமே 40 சதவீதமான மாணவர்களைக் கொண்டுள்ளது.
இந்நிலையில், கடந்த மே மாதம் கல்விக்கான அனுமதியை 40 சதவீதமாக மார்க் கார்னி குறைத்திருந்தார்.
2027ஆம் ஆண்டுக்குள் மாணவர்களும் தற்காலிக குடியிருப்பாளர்களும் மொத்த மக்கள் தொகையில் 5 சதவீதத்திற்குள் தான் இருக்க வேண்டும் என தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 2 நாட்கள் முன்

இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் நகர்வு... வங்கதேசத்தில் ஆயுதங்களை தயாரிக்க துருக்கி முடிவு News Lankasri

Optical illusion: உங்கள் கண்களுக்கு உயிர் உள்ளது எனில் இதில் இருக்கும் நேரான “28” எங்கே உள்ளது? Manithan
