மிருகங்களிடம் இருந்து மனிதர்களுக்கு கோவிட் பரவுமா? பேராசிரியர் வெளியிட்ட தகவல்
மிருகக்காட்சி சாலைகளில் மிருகங்களை பார்த்துக் கொள்ளும் நபர்கள் ஊடாகவே மிருகங்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.
எனினும் மிருகங்களிடம் இருந்து மனிதர்களுக்கு கொவிட் தொற்றியமை தொடர்பில் இதுவரையில் எந்தத் தகவல்களும் இல்லையென ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலீகா மலவிகே தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய தற்போது வெளிவந்துள்ள தரவுகளுக்கமைய நாய், குரங்கு போன்றவற்றிற்கே கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தெஹிவளை மிருகக் காட்சிசாலையில் சிங்கம் ஒன்றிற்கு கொவிட் தொற்றியமை தொடர்பில் தெளிவுப்படுத்தும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.