OMP அலுவலகத்தின் அடுத்த நகர்வு: விளக்கம் கோரும் உறவுகள்

Sri Lankan Tamils Tamils Sri Lanka Parliament
By Parthiban Dec 07, 2024 08:07 PM GMT
Report

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தலைவிதியை அறிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவினர்களின் நெருங்கிய உறவினர் ஒருவரைக் கூட கண்டுபிடிக்க முடியாத நிலையில், கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக இயங்கி வரும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு (OMP) புதிய உறுப்பினர்களை இணைத்துக்கொள்வதன் நோக்கம் என்னவென? போரால் பாதிக்கப்பட்ட தமிழ் தாய்மார்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

2016ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை நிறுவுதல், நிர்வகித்தல் மற்றும் செயற்படுத்தல் ஆகிய விதிகளுக்கு அமைவாக, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அண்மையில் அறிவித்திருந்தது.

அதற்கான விண்ணப்பங்கள் நாடாளுமன்ற இணையதளத்தில் (www.parliament.lk) காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கான உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கான விரைவான இணைப்பு என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்ட வடிவமைப்பின் படி தயாரிக்கப்பட வேண்டும்." என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மன்னாரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசின் உதவி

மன்னாரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசின் உதவி

காணாமற்போனோர் பிரச்சினை

காணாமற்போனோர் பிரச்சினையை தீர்க்க விரும்பினால் முதலில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை கலைக்க வேண்டுமென, “OMP அலுவலகத்திற்கு புதிய நியமன கோரிக்கை தொடர்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரின் நிலைப்பாடு” என்ற தலைப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் வடக்கு, கிழக்கு சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

OMP அலுவலகத்தின் அடுத்த நகர்வு: விளக்கம் கோரும் உறவுகள் | Call To Dissolve Omp For Missing Persons Issue

உண்மையாகவே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு விரும்புவார்களாயின் செயல் திறனற்ற இந்த OMP உடனடியாகக் கலைக்கப்படவேண்டும் என்பதுடன் எமது உறவுகள் சரணடைந்த, கையளிக்கப்பட்ட, கைது செய்யப்பட்ட முக்கியமான நான்கு காவலரண்களுக்குப் பொறுப்பாக இருந்தவர்கள் விசாரிக்கப்பட்டு உண்மை அறியப்பட வேண்டும்.

எமது உறவுகளைக் காணாமலாக்கிய இராணுவ அதிகாரிகள் தற்போதும் உயிருடனும் பதவியிலும் உள்ளார்கள். அவர்களை உடனடியாக விசாரிப்பதன் மூலம் உண்மையை கண்டறிய வேண்டும். அதுவே காலம் காலமாக ஏமாற்றப்பட்டு வந்த எமக்கு நல்லெண்ண சமிக்ஞையாக இருக்கும்.

அதை விடுத்து எம்மால் நிராகரிக்கப்பட்ட OMP இற்கு புதியவர்களை உள்வாங்க ஆட்சேர்ப்பு செய்ய முனைவதானது எம்மை தொடர்ந்து ஏமாற்றவே சகலரும் முயற்சிக்கிறார்கள் என்ற உணர்வை பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது.

முல்லைத்தீவில் மதகுகளற்ற வீதியால் அசௌகரியங்களுக்கு உள்ளாகும் மக்கள்

முல்லைத்தீவில் மதகுகளற்ற வீதியால் அசௌகரியங்களுக்கு உள்ளாகும் மக்கள்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

 வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் யோகராசா கனகரஞ்சனி மற்றும் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடதராஜா ஆகியோரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

OMP அலுவலகத்தின் அடுத்த நகர்வு: விளக்கம் கோரும் உறவுகள் | Call To Dissolve Omp For Missing Persons Issue

புதிய அரசாங்கமும் கடந்த கால அரசாங்கங்களைப் போன்று தமது பிரச்சினைகளை பார்க்கும் விதத்தில் மாற்றத்தை காண முடியவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மாற்றம் எனும் கோஷத்துடன் பதவி ஏறிய புதிய அரசு, பழைய சிங்கள அரசுகள் போலவேதான் தமிழ் மக்களின் மிக முக்கியமான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனையை அணுகவுள்ளது என்பதையே காட்டுகின்றது.”

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 உடன்படிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிய அப்போதைய அரசாங்கத்தினால், காணாமல் போனவர்கள் பற்றிய உண்மையை வெளிப்படுத்தும் நோக்கில், 2017 ஆம் ஆண்டு நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) ஸ்தாபிக்கப்பட்டது.

OMP சட்டம் வரையப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை பாதிக்கப்பட்டவர்களின் அபிப்பிராயங்களுக்கோ அல்லது அவர்களின் வேண்டுகோள்களுக்கோ செவி சாய்க்காது, சர்வாதிகாரப் போக்கில் அனைத்து விடயங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கும் தமிழ்த் தாய்மார்கள், உண்மையைக் கண்டறியும் பொறிமுறையானது பாதிக்கப்பட்டவர்களின் பங்கேற்புடன் செயற்படுத்தப்பட வேண்டுமெனவும், எனினும் அது வெளிப்படைத்தன்மையற்ற எதேச்சாதிகாரமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சஜித்தின் ஆசனத்தை கைப்பற்றிய அர்ச்சுனா! பின்னணி தொடர்பில் அம்பலமான உண்மை

சஜித்தின் ஆசனத்தை கைப்பற்றிய அர்ச்சுனா! பின்னணி தொடர்பில் அம்பலமான உண்மை

 இடைக்கால நிவாரணம்

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் நோக்கில் 2015 இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின் 4 தூண்களான உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள் நிகழாமையை உறுதி செய்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியுள்ள தமிழ்த் தாய்மார்கள், உண்மையை கண்டறிந்தபின் அவ்விடயம் நீதிப்பொறிமுறைக்கு உட்படுத்தப்பட வேண்டுமெனவும், எனினும் OMP ஆரம்பித்து ஏழு வருடங்கள் ஆகின்ற போதும் ஒரு உண்மையேனும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

OMP அலுவலகத்தின் அடுத்த நகர்வு: விளக்கம் கோரும் உறவுகள் | Call To Dissolve Omp For Missing Persons Issue

கிளிநொச்சியில் காணாமல் போனோர் அலுவலகத்தின் (OMP) உறுப்பினர் தம்பையா யோகராஜா, 2024 நவம்பரில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு 21,630 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும், 3,800க்கும் அதிகமானோருக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ்த் தாய்மார்கள் தொடர்ச்சியாகக் கோரி வரும் நீதிக்குப் புறம்பாக இழப்பீடு அலுவலகம் அமைப்பதன் நோக்கத்தை சவாலுக்கு உட்படுத்தியுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு கிழக்கு சங்கம், நீதியை ஓரங்கட்டிவிட்டு இழப்பீட்டு அலுவலகம் திறக்க வேண்டிய தேவை என்னவெனவும், உண்மையை கண்டறியாமலே பணத்தை வழங்கி ஏழைகளின் வாயை மூடி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதற்காகவா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

2019 ஜூலை 7ஆம் திகதி உண்மையை கண்டறிவதற்காக நாம் ஒப்படைத்த ஐந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்கள் தொலைத்துவிட்டு அவற்றை மீள கோரியமையானது இந்த அலுவலகம் எவ்வளவு பொறுப்பின்மையுடன் செயற்படுகிறது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் வடக்கு, கிழக்கு சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW        

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Parthiban அவரால் எழுதப்பட்டு, 07 December, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US