இலங்கை தினம் தொடர்பில் அமைச்சரவையின் முடிவு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் முன்மொழியப்பட்ட இலங்கை தினத்தை நடத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இது தொடர்பான அறிவிப்பை இன்றையதினம் (22.10.2025) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட உரையில் இதனை ஏற்கனவே முன்மொழிந்திருந்தார்.
1,000 கோடி ரூபா நிதி
சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வை வளர்ப்பதன் மூலம் இணக்கமான இலங்கையை உருவாக்கும் நோக்கில் இந்த தினம் கொண்டாடப்படும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் இதற்காக 1,000 கோடி ரூபா நிதியை ஒதுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan