இலங்கையில் இந்தியாவின் ரூபாவை பயன்படுத்தும் நிலை ஏற்படலாம்...! வீழ்ச்சியடையும் வர்த்தகங்கள்

Central Bank of Sri Lanka Sri Lanka Economic Crisis Sri Lanka Inflation Sri Lanka Bankrupt Economy of Sri Lanka
By Steephen May 26, 2022 10:19 AM GMT
Report

அடுத்த ஒரு மாத காலத்தில் தமது வர்த்தகங்கள் அனைத்தும் வீழ்ச்சியடையும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்ந்தும் நீடித்தால், இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்தும் நிலைமை உருவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில்,  நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் தொடர்ந்தும் தமது வர்த்தகத்தை கொண்டு நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஐக்கிய தேசிய வர்த்தகர்கள் ஒன்றியம் கூறியுள்ளது.

சேமித்து வைத்திருந்த பணத்திலேயே இதுவரை வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன எனவும் தொடர்ந்தும் அப்படி செய்ய முடியாத கஷ்டமான நிலைமைக்கு வந்துள்ளதாகவும் ஒன்றியத்தின் தலைவி டானியா அபயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் இந்தியாவின் ரூபாவை பயன்படுத்தும் நிலை ஏற்படலாம்...! வீழ்ச்சியடையும் வர்த்தகங்கள் | Business Crisis Money Economy

பணத்தை அச்சிட இயந்திரங்களை வழங்குங்கள்

அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க பணத்தை அச்சிடப் போவதாக பிரதமர் கூறியுள்ளார். அப்போது தனியார் துறை ஊழியர்களின் நிலைமை என்னவாகும்.

அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க பணம் அச்சிடப்படுமாயின், பணத்தை அச்சிட எங்களுக்கு இயந்திரங்களை வழங்குங்கள். இலங்கை ஐக்கிய தேசிய வர்த்தகர்கள் ஒன்றியம் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களை பிரதிநிதித்துப்படுத்துகிறது.

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகம் என்பது நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்பு. அவற்றை பாதுகாக்க எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அனைவரும் தாம் கரைசேர எம்மை பயன்படுத்திக்கொண்டனர். நாங்கள் பிச்சை எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நாட்டு பொருளாதாரத்தின் பிரதான முதுகெலும்பான நாங்கள் நடுத் தெருவுக்கு வந்துள்ளோம்.

இலங்கையில் இந்தியாவின் ரூபாவை பயன்படுத்தும் நிலை ஏற்படலாம்...! வீழ்ச்சியடையும் வர்த்தகங்கள் | Business Crisis Money Economy

நாட்டுக்கு என்ன செய்தோம் என்பதை மனசாட்சியை தட்டி கேளுங்கள் என்று நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 பேரிடமும் கோருகிறோம்.

அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க பணத்தை அச்சிடப் போவதாக பிரதமர் கூறுகிறார். நாங்கள் எமது ஊழியர்களுக்கு சம்பளத்தை கொடுக்கவும் வங்கி கடனை செலுத்த முடியாமலும் சிரமப்படுகிறோம்.

எமக்காக அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டங்களும் இல்லை. சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள பாதுகாக்க வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்குமாறு பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் டானியா அபயசுந்தர தெரிவித்துள்ளார்.  

இந்தியாவின் ரூபாயை பயன்படுத்தும் நிலைமை ஏற்படலாம் 

அதேவேளை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் இலங்கையில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்படக் கூடும் என இலங்கை கணக்காய்வு திணைக்களத்தின் முன்னாள் கணக்காய்வாளர் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

பஞ்சம் காரணமாக மக்கள் வீதிகளில் இறக்க நேரிடலாம். இதனை தடுக்க தற்போதே உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கையில் இந்தியாவின் ரூபாவை பயன்படுத்தும் நிலை ஏற்படலாம்...! வீழ்ச்சியடையும் வர்த்தகங்கள் | Business Crisis Money Economy

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் ஆபத்தை ஆட்சியாளர்கள் உணரவில்லை. இந்த நிலைமை தொடருமாயின் நாட்டில் உணவு பஞ்சம் ஏற்பட்டு, சுனாமியை விட பேரழிவு ஏற்படலாம்.

விவசாயிகளுக்கு தேவையான பசளை உள்ளிட்ட பொருட்களை வழங்கி விவசாயத்தை கட்டியெழுப்ப வேண்டும். அப்படியில்லை என்றால், அரிசியை இறக்குமதி செய்ய நேரிடும்.

எனினும் அரிசியை இறக்குமதி செய்ய இலங்கை அரசிடம் பணமில்லை. அத்துடன் நாட்டின் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை நீடித்தால், இந்தியாவின் ரூபாயை பயன்படுத்தும் நிலைமை உருவாகும்.

இந்தியாவுடன் மேற்கொள்ளும் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் அரசாங்கம் கவனமாக செயற்பட வேண்டும். இந்தியாவிடம் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாத நிலைமை உருவானால், நாட்டின் துறைமுகங்களை இந்தியாவுக்கு வழங்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் காமினி விஜேசிங்க கூறியுள்ளார். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

09 Nov, 2014
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், India

26 Oct, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Wuppertal, Germany

08 Nov, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US